thaniyee-thannanthaniye-song-lyrics

தனியே தன்னந்தனியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil


BGM

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே…
புரியாதா… பேரன்பே…

ஆண்: ஓஹ்…
ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே…

BGM

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…

ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…

ஆண்: நானும் அவளும் இணைகையில்…
நிலா அன்று பால் மழை பொழிந்தது…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
புரியாதா…

BGM

ஆண்: என்னுடைய நிழலையும்…
இன்னொருத்தி தொடுவது…
பிழையென்று கருதிவிட்டாள்…
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி…
ஹலோ சொல்லி கைகொடுக்க…
தங்கமுகம் கருகிவிட்டாள்…

ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…

ஆண்: சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…

ஆண்: மீண்டும் வருவாள் நம்பினேன்…
அதோ அவள் வரும் வழி தெரியுது…
தனியே…..

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா……


Notes : Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. தனியே தன்னந்தனியே பாடல் வரிகள்.