தாய் உண்டு தந்தை உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாகோயில் காளை

Thaayundu Thantai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

BGM

ஆண் : பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில்…
போட்ட கதையைச் சொல்லவா…
உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து…
விட்ட கதையைச் சொல்லவா…

ஆண் : அய்யா ஓர் துன்பம் வந்து…
தெய்வத்திடம் போய் உரைத்தால்…
கை தந்து காக்கும் அல்லவா…

ஆண் : தெய்வமே துன்பம் தந்தால்…
எங்கே சென்று போய் உரைப்போம்…
நல்லோர்க்கு காலம் இல்லையா…

ஆண் : எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே இல்லே…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

BGM

ஆண் : தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை…
மேலும் நான் என்ன சொல்லட்டும்…
யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை…
நேரத்தை என்ன சொல்லட்டும்…

ஆண் : அன்னையின் பாலை உண்டு…
ஆரீராரோ கேட்டதில்லை…
அம்மம்மா என்ன கொடுமை…

ஆண் : திண்ணையில் நான் வளர்ந்தும்…
தெருவில் தர்மம் கேட்கவில்லை…
மேலும் ஏன் இந்தச் சிறுமை…

ஆண் : தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யய்யய்யா…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…


Notes : Thaayundu Thantai Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Ilaiyaraja. தாய் உண்டு தந்தை உண்டு பாடல் வரிகள்.