பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜா | கங்கை அமரன் | ஆகாய தாமரைகள் |
Anatha Vellathile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
—BGM—
பெண் : நீர் அருவிகள் ஒர் நதியென…
ஏன் நடக்கிறது…
ஆண் : வான் கடலெனும் தன் துணைவனை…
தான் கலந்திடவே…
பெண் : செந்தாழம்பூ கார்காலம் வந்ததும்…
கூத்தாடுதே யாரைக்கண்டு…
ஆண் : மின்னல் என்னும் தன் காதல் நாயகன்…
வானத்திலே மின்னக்கண்டு…
பெண் : அதில் தடைக்கோடு உண்டு…
ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
பெண் : மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
—BGM—
ஆண் : நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்…
நாம் இணைந்திடவே…
பெண் : உன் உறவினில் என் மனதினில்…
தேன் பெருகிடுதே…
ஆண் : என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்…
உன் கண்களே சொல்கின்றதே…
பெண் : உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது…
உன் மார்பிலே சாய்கின்றதே…
ஆண் : மனம் சதிராடும் காலம்…
பெண் : ஆனந்த வெள்ளத்திலே…
ஆண் : ஆனந்த வெள்ளத்திலே…
—BGM—
பெண் : தேன் சுவைதனை பூ மலர்ந்தனை…
யார் பிரித்திடுவார்…
ஆண் : யார் பிரித்தினும் வெண் நிலவினை…
வான் பிரிந்திடுமோ…
பெண் : ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்…
எந்நாளுமே மாறாதய்யா…
ஆண் : நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள்…
எந்நாளுமே நீங்காதம்மா…
பெண் : கண்ணா அதுதானே காதல்…
ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
Notes : Anatha Vellathile Song Lyrics in Tamil. This Song from Aagaya Thamaraigal (1985). Song Lyrics penned by Gangai Amaran. ஆனந்த வெள்ளத்திலே பாடல் வரிகள்.