ஆனந்த வெள்ளத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜாகங்கை அமரன்ஆகாய தாமரைகள்

Anatha Vellathile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

BGM

பெண் : நீர் அருவிகள் ஒர் நதியென…
ஏன் நடக்கிறது…

ஆண் : வான் கடலெனும் தன் துணைவனை…
தான் கலந்திடவே…

பெண் : செந்தாழம்பூ கார்காலம் வந்ததும்…
கூத்தாடுதே யாரைக்கண்டு…

ஆண் : மின்னல் என்னும் தன் காதல் நாயகன்…
வானத்திலே மின்னக்கண்டு…

பெண் : அதில் தடைக்கோடு உண்டு…

ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
பெண் : மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

BGM

ஆண் : நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்…
நாம் இணைந்திடவே…

பெண் : உன் உறவினில் என் மனதினில்…
தேன் பெருகிடுதே…

ஆண் : என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்…
உன் கண்களே சொல்கின்றதே…

பெண் : உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது…
உன் மார்பிலே சாய்கின்றதே…

ஆண் : மனம் சதிராடும் காலம்…

பெண் : ஆனந்த வெள்ளத்திலே…
ஆண் : ஆனந்த வெள்ளத்திலே…

BGM

பெண் : தேன் சுவைதனை பூ மலர்ந்தனை…
யார் பிரித்திடுவார்…

ஆண் : யார் பிரித்தினும் வெண் நிலவினை…
வான் பிரிந்திடுமோ…

பெண் : ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்…
எந்நாளுமே மாறாதய்யா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள்…
எந்நாளுமே நீங்காதம்மா…

பெண் : கண்ணா அதுதானே காதல்…

ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…

பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…


Notes : Anatha Vellathile Song Lyrics in Tamil. This Song from Aagaya Thamaraigal (1985). Song Lyrics penned by Gangai Amaran. ஆனந்த வெள்ளத்திலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top