Tag Archives: ஹரினி

thalaattu-naatpadu-theral-song-lyrics

தாலாட்டு நாட்படு தேறல் – 08

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துபி. சுசீலா, கே.எஸ். சித்ரா & ஹரினிஎன்.ஆர்.ரகுணந்தன்ஆல்பம்

Thalaattu – Naatpadu Theral – 08 Song Lyrics in Tamil


பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : வண்ணவண்ணக் கோமளமே…
வலதுகை மாம்பழமே…
இனம்பெருத்த வம்சத்தில்…
சனம்பெருத்த குடும்பத்தில்…
ஆறாம் திருமகனாய்…
ஆளவந்த சோழமன்னா…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

பெண் : புள்ளிமான் கோம்பையில…
புலிவந்து போகுதின்னு…
பொன்வேல் கைவாங்கி…
புலியெறிய வந்தவனே…

பெண் : சித்தெறும்பு கடிச்சாலும்…
சித்தப்பா வருவாக…
தாங்கித் தோள்மாத்த…
தாய்மாமன் வருவாக…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

பெண் : தாத்தாமார் தூக்கிவச்சா…
தாடிமுடி குத்துமின்னு…
அள்ளி அள்ளி மார்பணைக்க…
ஐத்தமார் வருவாக…

பெண் : பாட்டுப் பலபடிச்சு…
பால்சோறு ஊட்டிவிடும்…
கூட்டுக் குடும்பமடா…
குலவிளக்கே கண்ணுறங்கு…
குலவிளக்கே கண்ணுறங்கு…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : சின்னஞ்சிறு பிறையே…
சிவப்புக்கல் ரத்தினமே…
எண்ணக் களஞ்சியமே…
ஏலம்பூ வாசகமே…

—BGM—

பெண் : அப்பன் வெளியூரு…
ஆத்தா தனியாளு…
கூட்டுக் குடும்பம் இப்போ…
குடைசாஞ்சு போனதடா…

பெண் : தாய்மாமன் பொழப்புக்கு…
தாராவி போயிட்டாக…
சித்தப்பா எல்லாரும்…
சீமையில இருக்காக…

—BGM—

பெண் : உம்போலச் செல்வந்தன்…
உலகத்தில் கண்டதில்ல…
எம்போல ஏழையை நீ…
எங்காச்சும் கண்டதுண்டா…

பெண் : எச்சிப்பால் தீந்ததடா…
இருந்தவரை ஊட்டிவிட்டேன்…
மிச்சப்பால் ஊறும்வரை…
மின்மினியே கண்ணுறங்கு…
மின்மினியே கண்ணுறங்கு…

—BGM—

பெண் : மாணிக்க மாமணியே…
மார்க்கண்டன் புத்திரனே…
சோறூட்டச் சொந்தமில்ல…
தொட்டிலிட பந்தமில்ல…
நாதியத்த குடும்பத்தில்…
நாயகமா வந்தவனே…

—BGM—

பெண் : ஆத்தா ஒரு மூலையில…
அப்பன் ஒரு மூலையில…
காத்தாப் பறக்குறாக…
கவர்மெண்ட்டு வேலையில…

பெண் : வீடியோ பார்த்தபடி…
வேலைக்காரி தூளியாட்ட…
ஆடியோ கேட்டபடி…
ஆதவனே கண்ணுறங்கு…

—BGM—

பெண் : ஒத்தையில பொறந்தவனே…
உனக்காரும் துணையில்ல…
வித்தையெல்லாம் கத்துக்கிட்டு…
வெளிநாடு போமகனே…

பெண் : லண்டன் திருமகளோ…
லாஸ்ஏஞ்சல்ஸ் மருமகளோ…
பெத்ததாய் தகப்பனுக்கு…
பத்திரிகை கொடுமகனே…
பத்திரிகை கொடுமகனே…

—BGM—


Notes : Thalaattu – Naatpadu Theral – 08 Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டு – நாட்படு தேறல் – 08 பாடல் வரிகள்.


புது உணர்வே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்கார்த்திக் & ஹரினிகோபி சுந்தர்நிசப்தம்

Pudhu Unarve Song Lyrics in Tamil


பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…
எனை நான் உள் காண…
உன்னை இசையாக்கி…
அதிர்வின் மொழியாய் நின்றாய்…
அதில் நீ இசை என்று நான் ஒளி என்று…
நீயே சொன்னாய்…

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

பெண் : அழகான ஒர் தருணம்…
இது எந்தன் நாட்களிலே…
நெஞ்சோடு உன் வாசம் வீசும் தினமே…
என் உள்ளே நான் கண்ட…
முதல் பிம்பம் உன் ஸ்பரிசம்…
உணர்ந்தேனே உயிர் மாற்றம்…

பெண் : நான் தேடும் உறவே…
நானும் இனிதே…
அன்பால் என்னை அனைத்தாயே…
நாளும் இந்த ராகம்…
நெஞ்சில் கேட்க்கும் சுகம் அல்லவா…

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

ஆண் : வரமாக நீ கிடைத்தால்…
ஸ்வரமாக நான் பொழிவேன்…
தவமான என் தேடல் நீயே உயிரே…
உன்னை காணும் நாள் முழுதும்…
கூடுதே ஆயுள் பலம்…
என் உயிரில் நீ சுவாசம்…

ஆண் : உன்னோடு இங்கு நான் காணும் உலகே…
வாழ்வினிலே பரவசமே…
நாளும் இந்த ராகம்…
நெஞ்சில் கேட்கும் உந்தன் முகிலினமே…

பெண் : புது உணர்வே…
முதல் உணர்வே…

ஆண் : இதயம் உன்னை ரசிக்கிறதே…

பெண் : எனை நான் உள் காண…
உன்னை இசையாக்கி…
அதிர்வின் மொழியாய் நின்றாய்…

ஆண் : அதில் நீ ஸ்வரம் என்று நான் லயம் என்று…
வரம் நீ தந்தாய்…

ஆண் & பெண் : புது உணர்வே…
முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—


Notes : Pudhu Unarve Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. புது உணர்வே பாடல் வரிகள்.


மூங்கில் தோட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅபய் ஜோத்புர்கர் & ஹரினிஏ. ஆர். ரகுமான்கடல்

Moongil Thottam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…

ஆண் : பௌர்ணமி இரவு…
பௌர்ணமி இரவு…
பனி விழும் காடு…
பனி விழும் காடு…
ஒத்தையடி பாதை…
உன்கூட பொடிநட…

ஆண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…
இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…

ஆண் : மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…

—BGM—

பெண் : குளத்தான் கரையில…
குளிக்கும் பறவைக…
சிறகு வளத்துமே…
துளிக தெரிக்குமே…

ஆண் : முன் கோபம் விடுத்து…
முந்தானை எடுத்து…
நீ மெல்ல துடைக்க…
நான் உன்ன அணைக்க…

பெண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…
இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…

—BGM—

ஆண் : மரங்கள் நடுங்கும்…
மார்கழி இருக்க…
ரத்தம் உறையும்…
குளிரும் இருக்க…

பெண் : உஷ்ணம் யாசிக்கும்…
உடலும் இருக்க…
ஒத்த போர்வையில…
இருவரும் இருக்க…

பெண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…

ஆண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும்…

ஆண் & பெண் : நீ போதுமே…

ஆண் : மூங்கில் தோட்டம்…

பெண் : மூங்கில் தோட்டம்…

ஆண் : மூலிகை வாசம்…

பெண் : மூலிகை வாசம்…

ஆண் : நிரஞ்ச மௌனம்…

பெண் : நிரஞ்ச மௌனம்…

ஆண் : நீ பாடும் கீதம்…

பெண் : நீ பாடும் கீதம்…

ஆண் : பௌர்ணமி இரவு…

பெண் : பௌர்ணமி இரவு…

ஆண் : பனி விழும் காடு…

பெண் : பனி விழும் காடு…

ஆண் : ஒத்தையடி பாதை…

பெண் : ஒத்தையடி பாதை…

ஆண் : உன்கூட பொடிநட…

பெண் : உன்கூட பொடிநட…

ஆண் : இது போதும் எனக்கு இது போதுமே…

பெண் : வேறேன்ன வேணும்… நீ போதுமே…


Notes : Moongil Thottam Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் தோட்டம் பாடல் வரிகள்.


அலைபாயுதே கண்ணா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஒத்துக்காடு வெங்கடசுப்பா ஐயர்ஹரினி, கல்யாணி மேனன் & நெய்வேலி ராமலட்சுமிஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணுகானமதில்…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே…

பெண் : கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…

பெண் : கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…

பெண் : ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா…
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..

பெண் : கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…

பெண் : கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…
கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள் போலவே…
மனது வேதனைமிகவொடு…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

—BGM—


Notes : Alaipayuthey Kanna Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer. அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்.