Tag Archives: தீபா மரியம்

துளசிச்செடிய அரளிப்பூவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஹரிஹரன் & தீபா மரியம்ஜி.வி.பிரகாஷ் குமார்சேவல்

Thulasi Chediya Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…
துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

பெண் : ஓ… பட்டப்பகல் வெட்ட வெயில்…
நம்மை இப்ப சேர்க்கனும்…
நாலு நாளா ஒன் நெனப்பில்…
நானும் ரொம்ப வேர்க்கணும்…

ஆண் : என் உசுரே நீ உதிராம நான் புடிப்பேன்…
நெல்லுக்கதிரே நீ கருகாம வாழவைப்பேன்…

பெண் : எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா…
ஒன் நெனப்பே என் கண்ணால குத்துதடா…
குத்துதடா குத்துதடா…

BGM

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM

ஆண் : ஓஓஹோ… வேப்பங்குச்சா இருந்த என்ன…
வெட்டிவேரா மாத்துன…
சேவலப்போல் திரிஞ்ச என்ன…
ஊர்க்கோழியா ஆக்குன…

ஆண் : கட்டுத்தரி காளைப்போல காலம் பூரா சுத்துனேன்…
வீட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்…

பெண் : ஒத்தவார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே…
மொத்தமாத்தான் என் நெனப்ப மூடிவச்சு நின்னியே…

ஆண் : சொடலைமட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்…
ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு தள்ளுனேன்…

பெண் : என் வயசு ஒன்னப்பாக்காம கொறைஞ்சிறுமே…
என் உசுரு நீ இல்லன்னா மறைஞ்சிறுமே…
மறைஞ்சிறுமே மறைஞ்சிறுமே…

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM

பெண் : பாரிஜாத பூவ நீயும் பார்வையால தாக்குன…
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன…
கத்திக்கம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன…
ஒன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாதான் மாத்துன…

ஆண் : முக்குளத்துத் தோட்டத்துல நான் பறிச்சேன் முல்லைதான்…
நீ மூனு மையில் தாண்டிப்புட்டா எம்மனசு தொல்லதான்…

பெண் : சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்…
சாயங்கால நேரம் வந்தா ஒன்னுடைய ஞாபகம்…

ஆண் : என் உயிரே உன்ன ஒரு நாளும் மறக்கலையே…
இளம்பயிரே உன்ன ஒருநாளும் வெறுக்கலையே…
வெறுக்கலையே வெறுக்கலையே…

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM


Notes : Thulasi Chediya Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Hari. துளசிச்செடிய அரளிப்பூவு பாடல் வரிகள்.


Then Kudicha Song Lyrics in Tamil

தேன் குடிச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநரேஷ் ஐயர் & தீபா மிரியம்விஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Then Kudicha Song Lyrics in Tamil


BGM

பெண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…

பெண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

பெண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…

ஆண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…

ஆண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

BGM

பெண் : ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில்…
படகு போல் மனம் உன்னைச் சுத்துதே…

ஆண் : சுத்துதே சுத்துதே சுத்துதே சுத்துதே…

பெண் : ஒதுங்கும் வயல்களில் வீட்டு சுவர்களில்…
சொர்கத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே…

ஆண் : சொக்குதே சொக்குதே சொக்குதே சொக்குதே…

ஆண் : நேந்திரம் வாழைகளை ஏந்திய கால்களிலே…
நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ…
இளமை நனைய சிறகு விரியும்…
என்னமோ செய்யுது என்னமோ செய்யுது…
என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி…

BGM

பெண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம் தான்…

பெண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

ஆண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…

BGM

பெண் : காதல் கதகளி காதல் கதகளி…
கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்…

ஆண் : ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில்…

பெண் : வாழை இலைகளில் சாரல் மழைத்துளி…
கவிதை பாடுது சுகயாத்திரையில்…

ஆண் : யாத்திரையில் யாத்திரையில்…
யாத்திரையில் யாத்திரையில்

ஆண் : அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே…
சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க…
இதழும் இதழும் அமுதம் குடிக்க…
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது…
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுதடி…

BGM

ஆண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…

ஆண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

ஆண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…

ஆண் : மந்தார மலரே மந்தார மலரே…
சீரடி முடித்தாயோ…
மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில்…
நீ கூட வருவாயோ…


Notes : Then Kudicha Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. தேன் குடிச்ச பாடல் வரிகள்.


கண்கள் இரண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபெல்லி ராஜ் & தீபா மரியம்ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Kangal Irandal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

BGM

ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத…
பொழுதுகள் உன்னோடு கழியுமா…
தொடவும் கூடாத படவும் கூடாத…
இடைவெளி அப்போது குறையுமா…

பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே…
மறுபுறம் நாணமும் தடுக்குதே…
இது வரை யாரிடமும் சொல்லாதகதை…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

BGM

பெண் : கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத…
மனதிற்க்குள் எப்போது நுழைந்திட்டாய்…
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத…
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்…

ஆண் : உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை…
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை…
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர…

பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி…

பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…

ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…


Notes : Kangal Irandal Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Thamarai. கண்கள் இரண்டால் பாடல் வரிகள்.