சோல பசுங்கிளியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Sola Pasunkiliye Song Lyrics in Tamil


ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…

BGM

ஆண் : கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே…
மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே…

ஆண் : வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே…
பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே…

ஆண் : நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே…
நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

BGM

ஆண் : தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே…
தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே…

ஆண் : சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ…
மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ…

ஆண் : கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி…
செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…


Notes : Sola Pasunkiliye Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. சோல பசுங்கிளியே பாடல் வரிகள்.