பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையராஜா | இளையராஜா | இளையராஜா | என் ராசாவின் மனசிலே |
Sola Pasunkiliye Song Lyrics in Tamil
ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…
ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…
ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…
—BGM—
ஆண் : கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே…
மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே…
ஆண் : வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே…
பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே…
ஆண் : நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே…
நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே…
ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…
—BGM—
ஆண் : தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே…
தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே…
ஆண் : சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ…
மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ…
ஆண் : கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி…
செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி…
ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…
ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…
Notes : Sola Pasunkiliye Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. சோல பசுங்கிளியே பாடல் வரிகள்.