பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பயணங்கள் முடிவதில்லை |
Thogai Ilamayil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
கோதை இவள் விழி நூறு கவிதைகள்…
நாளும் எழுதிடுமோ…
ஆண் : தேன் சிந்தும் நேரம்…
நான் பாடும் ராகம்…
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ…
ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
—BGM—
ஆண் : கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்…
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்…
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்…
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்…
ஆண் : விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா…
அன்னமும் இவளிடம் நடை பழகும்…
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்…
ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
ஆண் : தேன் சிந்தும் நேரம்…
நான் பாடும் ராகம்…
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ…
—BGM—
ஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்…
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்…
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்…
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்…
ஆண் : அருவிகளோ ராகந் தரும்…
அதில் நனைந்தால் தாகம் வரும்…
தேவதை விழியிலே அமுத அலை…
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை…
ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
கோதை இவள் விழி நூறு கவிதைகள்…
நாளும் எழுதிடுமோ…
ஆண் : தேன் சிந்தும் நேரம்…
நான் பாடும் ராகம்…
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ…
Notes : Thogai Ilamayil Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Vairamuthu. தோகை இளமயில் பாடல் வரிகள்.