பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பயணங்கள் முடிவதில்லை |
Yeh Aatha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
ஆண் : அடி ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…
ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
—BGM—
ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம…
அணைக்கத் துடிச்சிருக்கேன்…
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…
ஆண் : தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா…
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா…
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா…
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க…
ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…
—BGM—
ஆண் : நான் போறேன் முன்னால…
நீ வாடி பின்னாலே…
நாயக்கர் தோட்டத்துக்கு…
ஆண் : பேசாதே கண்ணால…
என்னாடி அம்மாலே…
வாடுற வாட்டத்துக்கு…
ஆண் : சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது…
செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது…
பவள வாயில தெரியுற அழக…
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது…
ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா… ஹா ஆஅ…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…
ஆண் : ஏய்… ஆத்தா ஆ ஆ ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
—BGM—
Notes : Yeh Aatha Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ஆத்தா ஆத்தோரமா பாடல் வரிகள்.