மணியோசை கேட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபயணங்கள் முடிவதில்லை

Mani Osai Ketu Song Lyrics in Tamil


BGM

பெண் : மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
திருத்தேரில் நானும் அமர்ந்து…
ஒரு கோயில் சேர்ந்த பொழுது…
அந்தக் கோவிலின் மணி வாசலை…
இங்கு மூடுதல் முறையோ… ஹ்ம்… ஹ்ம்ம்…

பெண் : மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…

BGM

ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க… ஆஅ…
ராதை வந்தால் ஆகாதோ…
ராதையோடு ஆசைக் கண்ணன்… ஹாஆ…
பேசக் கூடாதோ…

பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க…
ராதை வந்தால் ஆகாதோ…
ராதையோடு ஆசைக் கண்ணன்…
பேசக் கூடாதோ…

ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ…
கண்ணன் மனம் வாடலாமோ…
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ…

ஆண் : மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…

BGM

ஆண் : பாதை மாறிப் போகும் போது…
ஊரு வந்தே சேராது…
தாளம் மாறிப் போடும் போது… ஆ…
ராகம் தோன்றாது…

பெண் : பாதை மாறிப் போகும் போது…
ஊரு வந்தே சேராது…

ஆண் : தாளம் மாறிப் போடும் போது…
ராகம் தோன்றாது…

பெண் : பாடும் புது வீணை இங்கே…

ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே…
காலம் மாறுமோ தாளம் சேருமோ…

பெண் : ஓஹோஓ… மணியோசை கேட்டு எழுந்து…
ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து…
ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது…

பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை…
இங்கு மூடுதல் முறையோ…

ஆண் : ஹம் ஹ்ம்ம்… மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…


Notes : Mani Osai Ketu Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Muthulingam. மணியோசை கேட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top