குயில் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாசுவர்ணலதாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Kuyil Pattu Song Lyrics in Tamil


BGM

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ…
அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ…

பெண் : குயிலே போ போ…
இனி நான்தானே…
இனி உன் ராகம்…
அது என் ராகம்…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

BGM

பெண் : அத்தை மகன் கொண்டாட…
பித்து மனம் திண்டாட…
அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன்… ஓஹோ…

பெண் : புத்தம் புது செண்டாகி…
மெத்தை சுகம் உண்டாக…
அத்தனையும் அள்ளி கொடுப்பேன்… ஓஹோ…

பெண் : மன்னவனும் போகும் பாதையில்…
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்…
உத்தரவு போடும் நேரமே…
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்…

பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே…
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே…
கீதம் பாடுதே…
வாசல் தேடுதே…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

BGM

பெண் : காலம் இங்கு கூண்டாக…
வந்த இன்பம் வேம்பாக…
இன்று வரை எண்ணி இருந்தேன்… ஓஹோ…

பெண் : பிள்ளை தந்த ராசாவின்…
வெள்ளை மனம் பாராமல்…
தள்ளி வைத்து தள்ளி இருந்தேன்… ஓஹோ…

பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை…
கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன்…
கற்பகத்து போா்பதத்து பூவினை…
அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்…

பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே…
வாழும் ஆசையோடு…
கீதம் பாடுதே…
வாசல் தேடுதே…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ…
அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ…

பெண் : குயிலே போ போ…
இனி நான்தானே…
இனி உன் ராகம்…
அது என் ராகம்…


Notes : Kuyil Pattu Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. குயில் பாட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top