பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | இது நம்ம பூமி |
Vana Mazhai Pole Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வானமழைப் போலே புது பாடல்கள்…
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்…
நிலைக்கும் கானம் இது…
நெடு நாள் வாழும் இது…
ஆண் : வானமழைப் போலே புது பாடல்கள்…
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்…
—BGM—
ஆண் : இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்…
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்…
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்…
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்…
பழிவாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்…
ஆண் : வானமழைப் போலே புது பாடல்கள்…
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்…
நிலைக்கும் கானம் இது…
நெடு நாள் வாழும் இது…
ஆண் : வானமழைப் போலே புது பாடல்கள்…
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்…
—BGM—
ஆண் : மா கம தா நி தா…
க ம ப த நி தா நி…
சா நி நீ ப பா க காச சாநி நீ த…
த சா ம தா நீ பா க சா…
ஆண் : குரலில் தேன் குழைத்து குயிலைப் படைத்தவர் யார்…
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்…
அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவை இல்லை…
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை…
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்…
ஆண் : வானமழைப் போலே புது பாடல்கள்…
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்…
நிலைக்கும் கானம் இது…
நெடு நாள் வாழும் இது…
ஆண் : வானமழைப் போலே புது பாடல்கள்…
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்…
Notes : Vana Mazhai Pole Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Bhoomi (1992). Song Lyrics penned by Vaali. வானமழைப் போலே பாடல் வரிகள்.