பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ & சுவர்ணலதா | இளையராஜா | இது நம்ம பூமி |
Oru Pokiri Raathiri Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…
ஆண் : பிறக்குது சபலம் சபலம்…
கொடுப்பது சுலபம் சுலபம்…
மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான்…
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்…
ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
—BGM—
ஆண் : கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை…
காயாகி கனிந்து வரும் காலம் உள்ள காலம் வரை…
பெண் : கல்யாணப் பந்தலுக்கு காத்திருக்கும் வாழை இது…
கண்ணா உன் கை அணைக்க பூத்திருக்கும் தாழை இது…
ஆண் : சிங்கார மேனிதான் சொக்க வெள்ளி பாற்குடம்…
பெண் : சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்…
ஆண் : எப்போது ஆரம்பம் அந்தப்புர நாடகம்…
பெண் : ஏன் இந்த தாமதம் என்ன சொல்ல காரணம்…
ஆண் : காத்திரு கண்ணே கொடி நாட்டலாம்… ஹோய்…
பெண் : காதலே வெல்லும் என காட்டலாம்… ஹோய்…
ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
பெண் : உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…
—BGM—
பெண் : என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான்…
இல்லாமல் தனித்திருந்தால் அம்பு பட்ட பைங்கிளிதான்…
ஆண் : எப்போதும் என் மனது உன்னைச் சுற்றி கோலம் இடும்…
தன்னந்தனி என்றிருந்தால் தத்தளித்து ஓலம் இடும்…
பெண் : என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச்சரம்…
எந்நாளில் கை வரும் உன்னுடைய மோதிரம்…
ஆண் : என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்…
பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம்…
பெண் : காதலால் கூவும் ஒரு பூங்குயில்… ஹோய்…
ஆண் : பூங்குயில் மேவும் இளம் ஆண் குயில்… ஹோய்…
பெண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…
பெண் : பிறக்குது சபலம் சபலம்…
கொடுப்பது சுலபம் சுலபம்…
மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான்…
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்…
ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
பெண் : உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…
Notes : Oru Pokiri Raathiri Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Bhoomi (1992). Song Lyrics penned by Vaali. ஒரு போக்கிரி ராத்திரி பாடல் வரிகள்.