Seeraga Samba Song Lyrics in Tamil

சீராக சம்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசிற்பிகண்ணன் வருவான்

Seeraga Samba Song Lyrics in Tamil


BGM

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

பெண் : ஏய்… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன்…
மாமா வெந்நீர் வச்சிருக்கேன்…
உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

பெண் : ஏய்… ஆத்துக்குள்ள சேலையில மீன புடிப்போமா…
அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா…

ஆண் : நான் ரொம்ப நாள சைவமடி…
உனக்கு தெரியுமா…
நீ கூப்பிட்டதும் ஓடி வர என்னால் முடியுமா…

பெண் : நான் விரிச்சி வச்ச இலைய…
நீ மூடலாமா மாமா…

ஆண் : என் ருசிய தெரிஞ்சிக்காம…
நீ சமச்சி வக்கலாமா…

பெண் : நான் ஆக்குனது ஆரிடலாமா…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு வாரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

BGM

ஆண் : உன் பத்து விரல் நகத்துலையும் விசேஷம் இருக்கா…
கை பட்ட தண்ணி இனிக்குதடி பாயாசம் கணக்கா…

பெண் : நீ உச்சி குளிர பேசுறது சாப்பாட்டு ருசிக்கா…
உன் மனசுக்குள்ள இப்போ வேற உள் நோக்கம் இருக்கா…

ஆண் : நீ இலைய போடும் போது…
அதில் வளையல் விழுந்ததென்ன…

பெண் : அது கைய மீறும் ஆச…
அத சொல்லி என்ன பண்ண…

ஆண் : ஒரு பசி முடிஞ்சா பசி பொறக்கும்…
சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (ஆண்கள்) : சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…

ஆண் : சிரிச்சி மயக்கும்சிவந்த உதட்டில் தேனுக்கு காத்திருக்கேன்…
மானே தேனுக்கு காத்திருக்கேன்…

பெண் : ஏ… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெண்ணி வச்சிருக்கேன்…
மாமா வெண்ணி வச்சிருக்கேன்…

ஆண் : ஹோ… உனக்குள் குதிச்சி உடம்ப தனைக்க உசுரு காத்திருக்கேன்…
கண்ணே ஊசிறு காத்திருக்கேன்…

பெண் : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

ஆண் : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (பெண்கள்) : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

குழு (ஆண்கள்) : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

BGM


Notes : Seeraga Samba Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சீராக சம்பா பாடல் வரிகள்.