ரத்தத்தப் பங்கு வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாபெரிய குடும்பம்

Rathatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…

ஆண் : சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

ஆண் : நேத்து வர ஒத்துமையா…
வாழ்ந்திருந்த சொந்தமடா…
யாரு கண்ணு பட்டதுவோ…
ஊரு கூட சொல்லுதடா…

ஆண் : விதியா தட்டுக் கெட்ட மதியா…
வினையா மத்தவங்க சதியா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : அம்மா மண்ணில் சாய்ந்ததம்மா…
வாழ வெச்ச வாழ மரம்…
சொன்னா சொல்லு தாங்கிடுமா…
ரோசம் உள்ள தாயின் மனம்…

ஆண் : பிள்ளைகள் பெத்தா நெல் மணிக் கொத்தா…
பெத்ததில் என்ன புண்ணியம் கண்டா…

ஆண் : பந்தமும் பாசமும் என்னாச்சு…
பெத்தவ சந்தியில் நின்னாச்சு…
பாடுகள் ஆயிரம் பட்டாச்சு…
பேச்சையும் மூச்சையும் விட்டாச்சு…

ஆண் : அம்மான்னு அம்மான்னு…
சொன்னது எல்லாம் சும்மாவா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : பெத்தா இவ மூணு புள்ள…
ஒண்ணுக்கொண்ணு சேரவில்ல…
ஒண்ணா இப்ப சேந்திருக்கு…
பெத்தவள தூக்கயிலே…

ஆண் : தள்ளியே வச்சு வெந்தது பாதி…
கொள்ளியே வச்சு வேகணும் மீதி…

ஆண் : தொட்டிலில் போட்டவ தாலாட்டி…
தோள்களில் வைத்தவ சீராட்டி…
ஒவ்வொரு வேளையும் சோறூட்டி…
உங்கள தாங்கிய மூதாட்டி…
புண்ணான நெஞ்சோடு பூமியவிட்டு போறாளே…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…


Notes : Rathatha Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by Vaali. ரத்தத்தப் பங்கு வச்சு பாடல் வரிகள்.