புத்தம் புது தேசம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்கர்ணா

Putham Puthu Song Lyrics in Tamil


BGM

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…
பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

பெண் : நம் கண்கள் தொட்டு…
காதல் காற்று வீசுமே… ஹோய்…

ஆண் : இங்கு இரவில் கதிரும்…
பகலில் நிலவும் காயுமே… ஹோய்…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

BGM

ஆண் : கலைவான் நிலவை என் கையில் பார்க்கின்றேன்…
கனவா நினைவா நான் கிள்ளி பார்க்கின்றேன்…

BGM

பெண் : கானா உலகம் அதை இங்கே பார்க்கின்றேன்…
நான் ஆணா பெண்ணா அட உன்னை கேட்கின்றேன்…

ஆண் : ஆனந்த ஆசை வந்தால் ஆணாகின்றாய்…
கண்ணாளன் கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்…

பெண் : என் நெஞ்சில் எப்போதும் பாழாகின்றாய்…
என் மீதில் இப்போது தேனாகின்றாய்…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

BGM

பெண் : காமன் வந்து என் காதில் சொன்னபடி…
காதல் கொண்டால் உன் கண்ணுக்கில்லையா கோடி…

BGM

ஆண் : மோகம் வந்து தீ மூட்டி பார்த்ததடி…
மூங்கில் காடாய் மனம் பற்றிக்கொண்டதடி…

பெண் : நீ என்னை கண்ட போது வாயில்லையே…
வாய் வார்த்தை வந்த போது நீயில்லையே…

ஆண் : சத்தான முத்தங்கள் தா முல்லையே…
அச்சாரம் நீ போடு ஆளில்லையே…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

பெண் : நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசுமே… ஹோய்…
ஆண் : இங்கு இரவில் கதிரும் பகலில் நிலவும் காயுமே… ஹோய்…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…
காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…


Notes : Putham Puthu Song lyrics in Tamil. This Song from Karnaa (1995). Song Lyrics penned by Vairamuthu. புத்தம் புது தேசம் பாடல் வரிகள்.