petha-manasu-song-lyrics

பெத்த மனசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன்னெப்பெத்த ராசா

Petha Manasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

ஆண் : வெறுங்கைய வீசிக் கொண்டு விறகு சுமந்து விட்டு…
இரவா பகலா தினம் தினம் உளைச்சதும்…
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சுத் தந்து…
பசியே தெரியா மகனா வளர்த்ததும்…

ஆண் : எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலே…
என் தாயி அவளப்போல் யாரு இந்த ஊரிலே…
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா…
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா…
அவதான் கோயில் அவதான் உலகம்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

ஆண் : மண்ணில் வரும் செடி கொடிகள் எவ்வளவு வகைகள்தான்…
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒண்ணேதான்…
பல வித மரங்கள் என்ன மரத்தில பழங்கள் என்ன…
நிறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்…

ஆண் : பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா…
காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா…
நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனேதாண்டா…
கெட்டது செய்யமாட்டான் வல்லவனேதாண்டா…
அவனே மனிதன் அதை நீ உணரு…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கு மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…


Notes : Petha Manasu Song Lyrics in Tamil. This Song from Enna Petta Rasa (1989). Song Lyrics penned by Ilaiyaraaja. பெத்த மனசு பாடல் வரிகள்.