penne-neeyum-penna-song-lyrics-in-tamil

பெண்ணே நீயும் பெண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்உன்னி மேனன் & கல்பனாஎஸ். ஏ. ராஜ்குமார்பிரியமான தோழி

Penne Neeyum Penna Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

ஆண் : ஒரு மூன்றாம் பிறையை சுற்றி…
தங்க ஜரிகை நெய்த நெற்றி…
பனிபூக்கள் தேர்தல் வைத்தால்…
அடி உனக்கே என்றும் வெற்றி…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போது தான்…
மொழிகள் இனிக்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

BGM

ஆண் : புறா இறகில் செய்த…
புத்தம் புதிய மெத்தை…
உந்தன் மேனி என்று…
உனக்கு தெரியுமா…

பெண் : சீன சுவரை போலே…
எந்தன் காதல் கூட…
இன்னும் நீளமாகும்…
உனக்கு தெரியுமா…

ஆண் : பூங்கா என்ன வாசம் என்று…
உந்தன் மீதுதெரியும்…

பெண் : தந்தம் என்ன வண்ணம் என்று…
உன்னை பார்க்க தெரியும்…
காதல் வந்த பின்னாலே…
கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்…

ஆண் : கம்பன் ஷெல்லி சேர்ந்துதான்…
கவிதை எழுதியது…
எந்தன் முன்பு வந்துதான்…
பெண்ணாய் நிற்கிறது…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

BGM

பெண் : மழை வந்த பின்னால்…
வானவில்லும் தோன்றும்…
உன்னை பார்த்த பின்னால்…
மழை தோன்றுதே…

ஆண் : பூக்கள் தேடிதானே…
பட்டாம் பூச்சி பறக்கும்…
உன்னை தேடி கொண்டு…
பூக்கள் பறந்ததே

பெண் : மின்னும் விந்தை என்ன என்று…
மின்னல் உன்னை கேட்கும்…
எங்கே தீண்ட வேண்டும் என்று…
தென்றல் உன்னை கேட்கும்…

ஆண் : உன்னை பார்த்த பூவெல்லாம்…
கையெழுத்து கேட்டு நிற்கும்…

பெண் : நீ தான் காதல் நூலகம்…
சேர்ந்தேன் புத்தகமாய்…
நீதான் காதல் பூ மழை…
நனைவேன் பாத்திரமாய்…

ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்…

பெண் : அரை நொடிதான் என்னை பார்த்தாய்…
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்…
பனி துளியாய் நீயும் வந்தாய்…
பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்…

ஆண் : பிரம்மன் செய்த சாதனை…
உன்னில் தெரிகிறது…
உன்னை எழுதும் போதுதான்…
மொழிகள் இனிக்கிறது…

BGM


Notes : Penne Neeyum Penna Song Lyrics in Tamil. This Song from Priyamana Thozhi (2003). Song Lyrics penned by Pa. Vijay. பெண்ணே நீயும் பெண்ணா பாடல் வரிகள்.