paarthene-song-lyrics

பார்த்தேனே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜெய்ராம் பாலசுப்பிரமணியம்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்மூக்குத்தி அம்மன்

Paarthene Song Lyrics in Tamil


BGM

ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே…
யார் கண்ணும் காணா முகமே…
கல் என்று நினைத்தேன் உனையே…
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…

ஆண் : எதில் நீ இருந்தாய்…
எங்கோ மறைந்தாய்…
உன்னைத் தேடி அலைந்தேன்…
எனக்குள்ளேத் தெரிந்தாய்…

ஆண் : இது போதும் எனக்கு…
வேறு வரங்கள் நூறு வேண்டுமா…
இறைவா இது தான் நிறைவா…
உணர்ந்தேன் உனையே உனையே…
மறந்தேன் எனையே எனையே…

ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே…
யார் கண்ணும் காணா முகமே…
ஓ… ஓ… கல் என்று நினைத்தேன் உனையே…
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…

BGM

ஆண் : வேதங்கள் மொத்தம் ஓதி…
யாகங்கள் நித்தம் செய்து…
பூஜிக்கும் பக்தி அதிலும்…
உன்னைக் காணலாம்…

ஆண் : பசி என்று தன் முன் வந்து…
கை ஏந்தி கேட்கும் போது…
தன் உணவைத் தந்தால் கூட…
உன்னைக் காணலாம்…

ஆண் : உன்னைக் காண பல கோடி…
இங்கு வாரி இறைக்கிறார்கள்…
எளிதாக உன்னை சேர…
இங்கு யார் நினைக்கிறார்கள்…

ஆண் : அலங்காரம் அதில் நீ இல்லை…
அகங்காரம் மனதில் இல்லை…
துளிக் கள்ளம் கபடம் கலந்திடாத…
அன்பில் இருக்கிறாய்…
உணர்ந்தேன் உனையே உனையே…
மறந்தேன் எனையே எனையே…

—BGM—

ஆண் : அகம் நீ ஜகம் நீ…
அணுவான உலகின் அகலம் நீ…
எறும்பின் இதய ஒளி நீ…
களிரின் துதிக்கைக் கணமும் நீ…

ஆண் : ஆயிரம் கை உண்டு என்றால்…
நீ ஒரு கை தரக் கூடாதா…
ஈராயிரம் கண் கொண்டாய்…
உன் ஒரு கண் என்னைப் பாராதா…
உன்னில் சரண் அடைந்தேன்…
இனி நீ கதியே…

ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே…
யார் கண்ணும் காணா முகமே…
கல் என்று நினைத்தேன் உனையே…
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…

BGM


Notes : Paarthene Song Lyrics in Tamil. This Song from Mookuthi Amman (2020). Song Lyrics penned by Pa.Vijay. பார்த்தேனே பாடல் வரிகள்.