oru-vaartha-kekka-song-lyrics-tamil

ஒரு வார்த்தை கேட்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிருஷ்ணகுமார் குன்னத் & சாதனா சர்கம்பரத்வாஜ்ஐயா

Oru Vaartha Kekka Song Lyrics in Tamil


பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

BGM

பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…
மணமாலை ஒன்ன பூ பூவாய் கோர்த்திருந்தேன்…
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டி கிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

BGM

பெண் : ஊருக்குள்ள ஓடும் தெருவில்…
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்…
நீ நடந்த சுவடுகள் இருந்தால்…
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்…

ஆண் : இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட…
அது திறக்கல என்றதுமே உடைச்சுப்புட்ட…

பெண் : நீ கிடைக்க வேண்டும் என்று…
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்…
பேச்சியம்மன் கோயில் சாமி…
பேப்பர் சாமி ஆனது என்ன…

ஆண் : கண்ணுக்குள்ள ஓடிய உன்ன துரத்த…
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச…
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட…
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச…

பெண் : ஓ… நீ கொடுத்த கல் கூட…
செங்கல் சாமி ஆனதய்யா…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

BGM

பெண் : அடுத்த வீட்டு கல்யாணத்தின்…
பத்திரிக்கை பார்க்கும்போது…
நமது பேரை மணமக்களாக…
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்…

ஆண் : நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு…
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு…

பெண் : கட்டபொம்மன் உருவம் போல…
உன்ன வரைந்து மறைத்தே வைத்தேன்…
தேசபற்று ஓவியம் என்று…
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட…

ஆண் : அணைகட்டு போலவே இருக்கும் மனசு…
நீ தொட்டு ஒடஞ்சது என்ன…
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்…
பூ பட்டு சரிஞ்சது என்ன…

பெண் : வேப்ப மரம் சுத்தி வந்தேன்…
அரச மரமும் பூத்ததய்யா…
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…

பெண் : இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

ஆண் : அந்த பார்வை பார்க்க முடியாம…
நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…

பெண் : சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிகிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

BGM


Notes : Oru Vaartha Kekka Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa Vijay. ஒரு வார்த்தை கேட்க பாடல் வரிகள்.