பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் & சாதனா சர்கம் | பரத்வாஜ் | வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் |
Kaddu Thiranthae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
—BGM—
ஆண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
கண்கள் திறந்தே கிடக்கின்றது…
காதல் உயிர்களை உடைக்கின்றது…
ஆண் : அடடா நெஞ்சில் வரும் காதல்…
வலி பூவில் ஒரு சூறாவளியோ… ஓ ஓஹோ…
—BGM—
பெண் : நெஞ்சைவிட்டு வந்த வார்த்தை ஒன்று…
தொண்டைக்குள் சூழ் கொண்டதோ…
ஆண் : உன்னைவிட்டு உடல் மீளவில்லை…
என் கால்கள் வேர் கொண்டதோ…
பெண் : பூமிக்கு வந்த பனி துளி நான்…
சூரியனே என்னை குடித்துவிடு…
ஆண் : யுகம் யுகமாய் நான் எரிந்துவிட்டேன்…
பனிதுளியே என்னை அணைத்துவிடு…
ஆண் : உறவே உயிரே… உணர்வே…
நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஹோ…
—BGM—
ஆண் : சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி…
பேரின்பம் நாம் அடைவோம்…
பெண் : கால் தடங்கள் அற்ற பூமியிலே…
காற்றாக நாம் நுழைவோம்…
ஆண் : சித்திரை மாதத்தை நான் நனைத்து…
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்…
பெண் : மார்கழி மாதத்தை நான் எரித்து…
முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்…
ஆண் : அடியே சகியே… சுகியே…
நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஹோ…
பெண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
கண்கள் திறந்தே கிடக்கின்றது…
காதல் உயிர்களை உடைக்கின்றது…
ஆண் : அடடா நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஓ… ஹோஹோ…
—BGM—
Notes : Kaddu Thiranthae Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. காடு திறந்தே பாடல் வரிகள்.