காடு திறந்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சாதனா சர்கம்பரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Kaddu Thiranthae Song Lyrics in Tamil


BGM

ஆண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…

BGM

ஆண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
கண்கள் திறந்தே கிடக்கின்றது…
காதல் உயிர்களை உடைக்கின்றது…

ஆண் : அடடா நெஞ்சில் வரும் காதல்…
வலி பூவில் ஒரு சூறாவளியோ… ஓ ஓஹோ…

BGM

பெண் : நெஞ்சைவிட்டு வந்த வார்த்தை ஒன்று…
தொண்டைக்குள் சூழ் கொண்டதோ…

ஆண் : உன்னைவிட்டு உடல் மீளவில்லை…
என் கால்கள் வேர் கொண்டதோ…

பெண் : பூமிக்கு வந்த பனி துளி நான்…
சூரியனே என்னை குடித்துவிடு…

ஆண் : யுகம் யுகமாய் நான் எரிந்துவிட்டேன்…
பனிதுளியே என்னை அணைத்துவிடு…

ஆண் : உறவே உயிரே… உணர்வே…
நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஹோ…

BGM

ஆண் : சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி…
பேரின்பம் நாம் அடைவோம்…

பெண் : கால் தடங்கள் அற்ற பூமியிலே…
காற்றாக நாம் நுழைவோம்…

ஆண் : சித்திரை மாதத்தை நான் நனைத்து…
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்…

பெண் : மார்கழி மாதத்தை நான் எரித்து…
முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்…

ஆண் : அடியே சகியே… சுகியே…
நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஹோ…

பெண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
கண்கள் திறந்தே கிடக்கின்றது…
காதல் உயிர்களை உடைக்கின்றது…

ஆண் : அடடா நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஓ… ஹோஹோ…

BGM


Notes : Kaddu Thiranthae Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. காடு திறந்தே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top