நின்னைச் சரணடைந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிபாம்பே ஜெயஸ்ரீஇளையராஜாபாரதி

Ninnaiye Song Lyrics in Tamil


BGM

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு…
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : துன்பம் இனியில்லை சோர்வில்லை…
சோர்வில்லை தோற்பில்லை…
நல்லது தீயது நாமறியோம்…
நாமறியோம் நாமறியோம்…

பெண் : அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட…
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…


Notes : Ninnaiye Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நின்னைச் சரணடைந்தேன் பாடல் வரிகள்.