nenjukkul-peidhidum-song-lyrics-vaaranam-aayiram

நெஞ்சுக்குள் பெய்திடும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், தேவன் ஏகாம்பரம் & வி.வி. பிரசன்னாஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

—BGM—

ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…
கள்ளத்தனம் ஏதும் இல்லா…
புன்னகையோ போகன்வில்லா…

ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ…
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…

ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும்…
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…
இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே…

ஆண் : இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

குழு (ஆண்கள்) : போகாதே…

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை… ஹோ…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

—BGM—

ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய்…

குழு (பெண்கள்) : தூக்கிச் சென்றாய்…

ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய்…
உன்னை தாண்டி போகும் போது…

குழு (பெண்கள்) : போகும் போது…

ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு…

ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே…
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே…
காதல் எனை கேட்கவில்லை…
கேட்காதது காதல் இல்லை…

ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே…
என தோன்றும் நேரம் இதுதானே…
நீ இல்லை இல்லை என்றாலே…
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே…

குழு (பெண்கள்) : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் & குழு (பெண்கள்) : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…

ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

—BGM—


Notes : Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. நெஞ்சுக்குள் பெய்திடும் பாடல் வரிகள்.