மலருது புது நாளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.என்.அனுராதாரோஷினிஜிப்ரான்பெட்ரோமாக்ஸ்

Malarudhu Pudhu Naale Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : அழகான நேசங்கள்…
மாறாதினி தீராதினி…
வேறேதும் தருமோ சுகம்…
மெதுவாய் எதிர்காலம்…
பூ பூக்குது மனம் வீசுது…
வாராதோ பேரானந்தம்…

பெண் : ஆகாய நீலம்…
தேயாது நாளும்…
வானிங்கு விண்மீன் குளம்…
ஆனந்த தீபம்…
சாயாது வாழும்…
வீடிங்கு ஓர் ஆலயம்…

—BGM—

பெண் : ஹா… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஆ…

—BGM—

பெண் : பலவித கிளி தினமே…
ஒரு மனம் அடைந்திடுமே…
பல உறவுகள் ஒரு உயிரென…
மறுகணம் இணைத்திடுமே…

பெண் : நிலவினில் பறந்திடவே…
உறவுகள் துணை வருமே…
சுடு வெயிலினில் கரு நிழலென…
அனுதினம் அவசியமே…

பெண் : ஒரு தழுவலில் பல விரிசலும்…
சிறு கனவென மறையாதோ…
ஒரு நொடியினில் மன வருத்தமும்…
பனி திரையென விலகாதோ…

பெண் : உறவுகளிங்கு மனதருகினில்…
நிதம் வேண்டுமே…
உலகினை இங்கு சுமந்திடும்…
ஒரு பலமே…

பெண் : இமையினை இங்கு விழி இரண்டினை…
அடை காக்குமே…
உயிர் வரை இங்கு கலந்திடுமே…
ஒரு நிஜமே…

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : அழகான நேசங்கள்…
மாறாதினி தீராதினி…
வேறேதும் தருமோ சுகம்…
மெதுவாய் எதிர்காலம்…
பூ பூக்குது மனம் வீசுது…
வாராதோ பேரானந்தம்…

பெண் : ஆகாய நீலம்…
தேயாது நாளும்…
வானிங்கு விண்மீன் குளம்…
ஆனந்த தீபம்…
சாயாது வாழும்…
வீடிங்கு ஓர் ஆலயம்…

—BGM—


Notes : Malarudhu Pudhu Naale Song Lyrics in Tamil. This Song from Petromax (2019). Song Lyrics penned by S. N. Anuradha. மலருது புது நாளே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top