பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஹரிஹரன், தேவன் ஏகாம்பரம் & வி.வி. பிரசன்னா | ஹரிஸ் ஜெயராஜ் | வாரணம் ஆயிரம் |
Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…
ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…
ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…
ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…
—BGM—
ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…
கள்ளத்தனம் ஏதும் இல்லா…
புன்னகையோ போகன்வில்லா…
ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ…
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…
ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும்…
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…
இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே…
ஆண் : இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
குழு (ஆண்கள்) : போகாதே…
ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை… ஹோ…
ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…
—BGM—
ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய்…
குழு (பெண்கள்) : தூக்கிச் சென்றாய்…
ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய்…
உன்னை தாண்டி போகும் போது…
குழு (பெண்கள்) : போகும் போது…
ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு…
ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே…
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே…
காதல் எனை கேட்கவில்லை…
கேட்காதது காதல் இல்லை…
ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே…
என தோன்றும் நேரம் இதுதானே…
நீ இல்லை இல்லை என்றாலே…
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே…
குழு (பெண்கள்) : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…
ஆண் & குழு (பெண்கள்) : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…
ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…
—BGM—
Notes : Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. நெஞ்சுக்குள் பெய்திடும் பாடல் வரிகள்.