naam-nadandha-theruvil-song-lyrics

நாம் நடந்த தெருவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்து ஆலப் ராஜுஆலப் ராஜுநாட்படு தேறல்

Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

—BGM—

ஆண் : இந்தத் தெருவில் காகம் கரைந்தால் இசைதான்…
இந்தத் தெருவில் புழுதி பறந்தால் மணம்தான்…
இந்தத் தெருவில் வேப்பங் கனியும் தேன்தான்…
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான்…

ஆண் : காதல் நடந்த வீதியிலே…
நடந்து பார்த்தல் கொடுமையே…
தேகம் தேடி ஆடை ஒன்று…
நடந்து போதல் நரகமே…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…

—BGM—

ஆண் : சாயம்போன பூக்கள் பூக்கும் மரங்கள்…
நம் கன்னம் போலக் காரை பெயர்ந்த சுவர்கள்…
திண்ணை எல்லாம் ஓடிப்போன குடில்கள்…
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும் தடங்கள்…

ஆண் : வீதியிருந்தும் வெறுமையாய்…
நாதியிருந்தும் தனிமையாய்…
இலக்கணத்தில் மட்டும் அல்ல…
வாழ்க்கையிலும் ஒருமையாய்…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
ம்ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—


Notes : Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாம் நடந்த தெருவில் பாடல் வரிகள்.