பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | வாணி ஜெயராம் & டி.எம். சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் | வருவான் வடிவேலன் |
Paava Kadaitheruvil Song Lyrics in Tamil
ஆண் : பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…
ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
—BGM—
ஆண் : சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
பித்தனின் விளையாட்டுப் பிழை பொறுத்தே உந்தன்…
பேரருள் தந்தாய் கந்தா…
—BGM—
ஆண் : கை சுமந்தாலென்ன தலை சுமந்தாலென்ன…
கந்தனைச் சுமக்கின்றது…
அவன் கடன் தந்த என் மேனி காலத்திலே வந்து…
கடனையும் தீர்க்கின்றது…
கடனையும் தீர்க்கின்றது…
ஆண் : முருகா சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
தத்துவம் அறிந்தேன் கந்தா…
—BGM—
பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…
—BGM—
பெண் : மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண…
மானிடம் திரள்கின்றது…
இந்த மக்களின் வினை என்னும் சிக்கலைத் தீர்க்கும் கரம்…
சிக்கலில் இருக்கின்றது…
கரம் சிக்கலில் இருக்கின்றது…
—BGM—
ஆண் : அழகப்பன் மேனிக்கு அழகு செய்தால் அதில்…
அருள் நெறி ஜொலிக்கின்றது…
திரு ஆண்டியப்பன் காலில் ஆசிகள் பெற வேண்டி…
அரசாங்கம் வருகின்றது…
—BGM—
பெண் : வெந்தணல் போல் எழுந்த விதியினில் துடிப்போர்க்கு…
சந்தனம் தருகின்றது…
நல்ல வீட்டுக் குலமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்லி…
குங்குமம் இடுகின்றது…
மங்கல குங்குமம் இடுகின்றது…
ஆண் : அவனிடம் போனவர்க்கு அவனை அடைதவர்க்கு…
எமனிடம் பயமில்லையே…
அந்த சிவனிடம் ஓம் என்றால் இவனிடம் பொருள் கேட்டான்…
இவனுக்கு மேலில்லையே…
ஆண் & பெண் : உண்டான ஆயுதங்கள் ஒன்பது எதிர்த்தாலும்…
தண்டாயுதம் காக்குமே…
அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு குறையாவும் ஓடிவிடும்…
கோடானு கோடி வருமே…
கோடானு கோடி வருமே…
—BGM—
Notes : Paava Kadaitheruvil Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. பாவக்கடைத் தெருவில் பாடல் வரிகள்.