பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | சீர்காழி கோவிந்தராஜன் & வாணி ஜெயராம் | எம்.எஸ்.விஸ்வநாதன் | வருவான் வடிவேலன் |
Neeyindri Yaarumilliai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
பெண் : நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு…
நீ ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு…
நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு…
நீ ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு…
பெண் : அருளே அருளே உலகம் உனதல்லவா…
அறிவும் பொருளும் யாவும் நீயல்லவா…
பெண் : நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீ ஒளி காட்டு…
பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ…
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ…
—BGM—
பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ…
மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ…
பெண் : கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ…
நாங்கள் கதிர்காமம்…
நாங்கள் கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ…
பெண் : காசி விசாலாட்சி உந்தன் மகனிடம் சொல்வாய்…
காஞ்சி காமாட்சி உந்தன் மகனிடம் சொல்வாய்…
அங்கயற்கண்ணி உந்தன் மகனிடம் சொல்வாய்…
அடி அபிராமி நீ உனது மகனிடம் சொல்வாய்…
ஆண் : கண்டேன் கண்டேன் ஏஏஏ கண்டேன்…
முத்துக் குமரன் பக்திச் சரவணன்…
வைத்திய நாதனைக் கண்டேன்…
முடியுடை மன்னன் திருமுடி அங்கே…
கொடியுடைச் சேவலைக் கண்டேன்…
ஆண் : கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும்…
தோகையைக் கண்டேன்…
கோலம் மாறிட ஞானக் கண்களும்…
ஊனக் கண்களும் கொண்டேன்…
—BGM—
ஆண் : வீடு நமக்குண்டு அறுபடை வீடு…
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்…
வீடு நமக்குண்டு அறுபடை வீடு…
வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்…
ஆண் : விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்…
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்…
விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்…
மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்…
ஆண் : ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…
ஐயா முருகய்யா…
—BGM—
Notes : Neeyindri Yaarumilliai Song Lyrics in Tamil. This Song from Varuvan Vadivelan (1978). Song Lyrics penned by Kannadasan. நீயின்றி யாருமில்லை பாடல் வரிகள்.