பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | திப்பு | தேவா | ரெட் |
Thaimadiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தாய் மடியே உன்னை தேடுகிறேன்…
தாரகையும் உருக வாடுகிறேன்…
ஆண் : பத்து திங்கள் என்னை சுமந்தாயே…
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே…
ஆண் : நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு…
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ…
உதிரம் வெளியேறும் காயங்களில்…
என் உயிரும் ஒழுகும் உன்னை வாா்த்தாயோ…
ஆண் : தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்…
ஆண் : தாய் மடியே உன்னை தேடுகிறேன்…
தாரகையும் உருக வாடுகிறேன்…
—BGM—
ஆண் : விண்ணை இடிக்கும் தோள்கள்…
மண்ணை அளக்கும் கால்கள்…
அள்ளி கொடுத்த கைகள்…
அசைவில் வந்ததென்ன…
—BGM—
ஆண் : கானல்கள் தின்னும் கண்கள்…
கனிந்து நிற்கும் இதழ்கள்…
உதவி செய்யும் பார்வை…
உயிர் குறைந்ததென்ன…
ஆண் : பாரத போர்கள் முடிந்த பின்னாலும்…
கொடுமைகள் இங்கே குறையவில்லை…
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்…
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை…
ஆண் : தாய் மடியே உன்னை தேடுகிறேன்…
தாரகையும் உருக வாடுகிறேன்…
—BGM—
ஆண் : படை நடத்தும் வீரன்…
பசித்தவர்கள் தோழன்…
பகைவருக்கும் நண்பன்…
படும் துயரம் என்ன…
—BGM—
ஆண் : தாய் பாலாய் உண்ட ரத்தம்…
தரை விழுந்ததென்ன…
இவன் பேருக்கேற்ற வண்ணம்…
நிலம் சிவந்ததென்ன…
ஆண் : தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி…
தேர்களில் ஏறி வருவதென்ன…
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி…
தாமதமாக வருவதென்ன…
ஆண் : தாய் மடியே உன்னை தேடுகிறேன்…
தாரகையும் உருக வாடுகிறேன்…
ஆண் : பத்து திங்கள் என்னை சுமந்தாயே…
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே…
ஆண் : நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு…
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ…
உதிரம் வெளியேறும் காயங்களில்…
என் உயிரும் ஒழுகும் உன்னை வாா்த்தாயோ…
ஆண் : தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்…
—BGM—
Notes : Thaimadiye Song Lyrics in Tamil. This Song from Red (2002). Song Lyrics penned by Vairamuthu. தாய் மடியே பாடல் வரிகள்.