marudhaani-song-lyrics

மருதாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்நாகாஷ் அஜீஸ், அந்தோனி தாசன் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்அண்ணாத்த

Marudhaani Song Lyrics in Tamil


BGM

பெண் : மானா மதுரையில…
மாமன் குதிரையில…
மாலை கொண்டுவாரான்…

பெண் : மீனா மினுங்கையில…
மின்னி சிணுங்கயில…
மேளங்கொட்டப்போறான்…

ஆண் : ஹேய்… மலந்து மலந்து அனிச்சங்கொழுந்து…
மணமணக்குதடி…
மாப்புள மாப்புள தோளோட ஆட…

ஆண் : வளந்து வளந்து அழக சொமந்து…
மினு மினுக்குதடி…
வெத்தல வெத்தல பாக்கோட கூட…

பெண் : அஞ்சன அஞ்சனமே விழி பூச…
கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா வளையோசை…

ஆண் : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

குழு (ஆண் & பெண்கள்) : பொம்மி நடந்துவாரா…
கும்மி அடிங்க ஜோரா…
தாலி சூடப் போறா…

குழு (ஆண் & பெண்கள்) : அம்மி மிதிக்கப்போறா…
அன்ப விதைக்கப்போறா…
தாயி வீட்டுச் சீரா…

ஆண் : ஹேய்… தவுல அடிக்க நாயனம் ஒலிக்க…
நேரம் நெருங்குதடி…
அட்சத அட்சத உன்மேல தூவ…

ஆண் : வெரல புடிக்க விரதம் முடிக்க…
வாரந்தெரிஞ்சிக்கடி…
அங்கன இங்கன நீத்துள்ளி தாவ…

பெண் : அக்கறஅக்கறையா இருப்பான்டி…
சக்கர சக்கரையா இனிப்பான்டி…

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

ஆண் : மண்ணுதான் விதை ஒன்னுதான்…
அது நூறா மாத்தி நீட்டுமே…
நின்னுதான் எங்க பொண்ணுதான்…
மறு வீட்டை ஏத்தி காட்டுமே…

குழு (ஆண்கள்) : நெட்டையில்ல குட்டையில்ல…
ரெண்டு கரையும் நேராக…
கொட்டும் மழை கொட்டையில…
தாங்கி பிடிக்கும் ஆறாக…

ஆண் : யாரு பெருசுன்னு எண்ணாத விட்டுத்தள்ளு…
வண்ணம் இணைஞ்சு நின்னாதான் வானவில்லு…

ஆண் : ஆணும் பொண்ணும் ஒன்னுக்கொன்னு…
சேர்ந்து வாழ வேணும் கண்ணு…
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு…

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…


Notes : Marudhaani Song Lyrics in Tamil. This Song from Annaatthe (2021). Song Lyrics penned by Mani Amuthavan. மருதாணி பாடல் வரிகள்.