குயில் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாசுவர்ணலதாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Kuyil Pattu Song Lyrics in Tamil


BGM

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ…
அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ…

பெண் : குயிலே போ போ…
இனி நான்தானே…
இனி உன் ராகம்…
அது என் ராகம்…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

BGM

பெண் : அத்தை மகன் கொண்டாட…
பித்து மனம் திண்டாட…
அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன்… ஓஹோ…

பெண் : புத்தம் புது செண்டாகி…
மெத்தை சுகம் உண்டாக…
அத்தனையும் அள்ளி கொடுப்பேன்… ஓஹோ…

பெண் : மன்னவனும் போகும் பாதையில்…
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்…
உத்தரவு போடும் நேரமே…
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்…

பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே…
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே…
கீதம் பாடுதே…
வாசல் தேடுதே…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

BGM

பெண் : காலம் இங்கு கூண்டாக…
வந்த இன்பம் வேம்பாக…
இன்று வரை எண்ணி இருந்தேன்… ஓஹோ…

பெண் : பிள்ளை தந்த ராசாவின்…
வெள்ளை மனம் பாராமல்…
தள்ளி வைத்து தள்ளி இருந்தேன்… ஓஹோ…

பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை…
கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன்…
கற்பகத்து போா்பதத்து பூவினை…
அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்…

பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே…
வாழும் ஆசையோடு…
கீதம் பாடுதே…
வாசல் தேடுதே…

பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே…

பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ…
அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ…

பெண் : குயிலே போ போ…
இனி நான்தானே…
இனி உன் ராகம்…
அது என் ராகம்…


Notes : Kuyil Pattu Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. குயில் பாட்டு பாடல் வரிகள்.