காற்றிலே காற்றிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், ஜியா & அகஸ்டின் கொயர்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Kaatrile Song Lyrics in Tamil


குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களில் நீர் அது காற்றினில் சேருதே…

BGM

ஆண் : நதி போகும் வழியில் யாரும்…
அணை போட்டு தடுத்திட கூடும்…
மேகத்தில் அணை போட வழி இல்லையே…

ஆண் : நிகழ் காலம் கண்ணின் முன்னே…
வருங்காலம் கனவின் பின்னே…
விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே…

குழு : இரவும் பகலும் நகரும்…
வெயிலும் மழையும் தொடரும்…
இதயம் இணையும் தருணம் வருமா …

குழு : இருளும் ஒளியும் பழகும்…
விடிந்தும் விடியா நிமிடம்…
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா…

BGM

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

BGM

{ ஆண் : வந்தே மாதரம்…
குழு : வந்தே மாதரம்… } * (4)

BGM

ஆண் : ஒரு வானம் போதாதென்று…
பல வானம் கேட்போம் என்று…
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே…

ஆண் : நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்…
இப்போது கைகள் கோர்த்தோம்…
இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே…

குழு : இதமும் பதமும் யுத்தம்…
இடையில் உயிரின் சத்தம்…
இதயம் முழுக்க கேட்டால் சுகமே…

குழு : எதிரும் புதிரும் வானம்…
இருந்தும் நெஞ்சில் வீரம்…
அன்பே என்றும் இன்பம் தருமே…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே …

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது …
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…


Notes : Kaatrile Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றிலே காற்றிலே பாடல் வரிகள்.