காற்றிலே காற்றிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், ஜியா & அகஸ்டின் கொயர்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Kaatrile Song Lyrics in Tamil


குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களில் நீர் அது காற்றினில் சேருதே…

BGM

ஆண் : நதி போகும் வழியில் யாரும்…
அணை போட்டு தடுத்திட கூடும்…
மேகத்தில் அணை போட வழி இல்லையே…

ஆண் : நிகழ் காலம் கண்ணின் முன்னே…
வருங்காலம் கனவின் பின்னே…
விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே…

குழு : இரவும் பகலும் நகரும்…
வெயிலும் மழையும் தொடரும்…
இதயம் இணையும் தருணம் வருமா …

குழு : இருளும் ஒளியும் பழகும்…
விடிந்தும் விடியா நிமிடம்…
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா…

BGM

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

BGM

{ ஆண் : வந்தே மாதரம்…
குழு : வந்தே மாதரம்… } * (4)

BGM

ஆண் : ஒரு வானம் போதாதென்று…
பல வானம் கேட்போம் என்று…
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே…

ஆண் : நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்…
இப்போது கைகள் கோர்த்தோம்…
இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே…

குழு : இதமும் பதமும் யுத்தம்…
இடையில் உயிரின் சத்தம்…
இதயம் முழுக்க கேட்டால் சுகமே…

குழு : எதிரும் புதிரும் வானம்…
இருந்தும் நெஞ்சில் வீரம்…
அன்பே என்றும் இன்பம் தருமே…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே …

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது …
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…


Notes : Kaatrile Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றிலே காற்றிலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top