ennavale-adi-ennavale-song-lyrics

என்னவளே அடி என்னவளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்ஏ. ஆர். ரகுமான்காதலன்

Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…
இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…
ஒரு உருண்டையும் உருலுதடி…

ஆண் : காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…
ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…
ஒரு கலக்கமும் தோன்றுதடி…

ஆண் : இது சொர்க்கமா நரகமா…
சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…
உன் வார்த்தையில் உள்ளதடி…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால்…
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…

ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்…
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்…

ஆண் : என் காதலின் தேவையை…
காதுக்குள் ஓதிவைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…


Notes : Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. என்னவளே அடி என்னவளே பாடல் வரிகள்.