endi-sudamani-song-lyrics-in-tamil

ஏன்டி சூடாமணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Endi Sudamani Song Lyrics in Tamil


பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் வார்த்ததுண்டோடி…

பெண் : பொண்ணுனா ஆண் உலகம்…
கவிதை என்கிறது…
கவிதைதான் கை வாளா…
ஆள கொல்லுறது…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…
பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் வார்த்ததுண்டோடி…

பெண் : பொண்ணுனா ஆண் உலகம்…
கவிதை என்கிறது…
கவிதை தான் கை வாளா…
ஆள கொல்லுறது…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…

BGM

பெண் : உன் மேல காதல் வச்சு…
உயிர் உனக்கு சொன்னான்…
அம்மா நீ ஏய்ச்சும் கூட…
அத பொறுத்து நின்னான்…

பெண் : உன் மேல குத்தம் ஏதும்…
விழாம செஞ்சான்…
உள் மனசு வெள்ளம் போல…
கண்ணீர விட்டான்…

பெண் : கை அணைச்சு கையை கழுவ…
வந்தாயோ பெண்ணே…
கால காலம் ஆணின் பாவம்…
வாராதோ பின்னே…

ஆண் : ஏன்டி சூடாமணி…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : ஏன்டி சூடாமணி…

BGM

பெண் : விட்டத மீண்டும் பெற…
விரும்பிடுதோ நெஞ்சம்…
தொட்டத மீண்டும் தொட்டு…
தொண்டங்கிறதோ எண்ணம்…

பெண் : பொத்தி பொத்தி வச்சா கூட…
பொல்லாது காதல்…
எந்த நேரம் என்ன செய்யும்…
சொல்லாது காதல்… யம்மா…

பெண் : கத்தி கூட காதல் போல…
கொல்லாது பெண்ணே…
காயம் பட்ட பின்னால் ஞானம்…
உண்டாச்சோ கண்ணே…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…


Notes : Endi Sudamani Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Vaali. ஏன்டி சூடாமணி பாடல் வரிகள்.