Category Archives: சைரன்

சைரன் – Siren (2024)

அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்அந்தோனி தாசன் & சிந்துரி விஷால்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Adi Aathi Song Lyrics in Tamil


BGM

ஆண் & பெண் : சின்ன மொட்டு ஒன்னு பூத்து…
இப்ப வெட்கப்படும் ஜோரு…
வண்ண பொட்டு வச்சி பூவு வச்சி…
நிக்கிறத பாரு…

ஆண் & பெண் : வாழ மர தோரணமா…
வாச நட பாதைங்க…
சீர் வரிச ஊர்வலமா…
சொந்த பந்தம் சேருங்க…

ஆண் & பெண் : கூடி வாங்க பொண்ணுகளே…
கொலவய போட்டு ஆடுங்க…
மாடி வீடு கட்டித்தரும்…
மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க…

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

BGM

பெண் : ஊராடுற வாய கொஞ்சம் உள்ள பூட்டி வையி…
வாலாட்டுற வேலையெல்லாம் வேணா தள்ளி வையி…

பெண் : காலாடுற கொலுசுக்குத்தான் பூத்த கத சொல்லு…
மேலாடுற சட்ட துணிய லூசா தைக்க சொல்லு…

BGM

ஆண் : சாத்திரத்த சொல்லி உன்ன…
பூட்டி வைக்கும் ஊரு…
ஏத்துக்காத பெண்ணே நீயும்…
எதித்து கேள்வி கேளு…

ஆண் : உண்மையிலே பெண்ணிந்தான் படைக்கிற கடவுள்…
ஆணக்கூட பொம்பளதான் சுமக்கணும் கருவில்…

ஆண் : தீட்டு என்று தள்ளி வைக்கும்…
குழு : வேலையத்த ஊரு…
ஆண் : சாத்திரத்த கொள்ளி வச்சி…
பெண் : உன் வேலைய பாரு…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி…
யே… அடியாத்தி அடியாத்தி…


Notes : Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Murugan Manthiram. அடியாத்தி பாடல் வரிகள்.


ஆகாயம் உடஞ்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Aagayam Odanju Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயம் உடஞ்சி தல மேல விழுந்தா…
அருகம்புல் தாங்குமா ஐயா…
சதிகார கூட்டம் அரங்கேற்றும் ஆட்டம்…
தடுக்காம போனேனே ஐயா…

ஆண் : எந்த சாமி வரும் கேட்க…
இந்த சங்கடத்த போக்க…
வாய்விட்டு அழக்கூட அவகிட்ட மொழியில்ல…

ஆண் : எப்படி அவ தாங்குனாளோ…
என்னென்ன சொல்ல ஏங்குனாளோ…
யாரிடம் போயி நானும் கேட்க…
எப்படி இந்த பாவம் போக்க…

BGM

ஆண் : என்ன விட்டு போயிட்டாளே…
வாழ்வே வெறுப்பாகி போச்சே…
வாய்மை நெருப்பாகி போச்சே…

ஆண் : தாயப்போல தூய அன்ப தந்தவள பறிகொடுத்தேன்…
பூமி சுழலாம நிக்கும்…
வானம் தீயாக கக்கும்…

ஆண் : சிலர் தின்னும் பிணமா போகுதே…
இங்கே என்னோட சாமி…
மாசில்லா நிலவே மனசாட்சி இன்றி தின்னுமா பூமி…

ஆண் : உசிர தின்னு வாழும்…
உசிருக்கு பேரென்ன சொல்லு…
உசிருக்கு பேரென்ன சொல்லு…

ஆண் : அந்த உசிருக்கு…
உசிருக்கு பேரென்ன சொல்லு…

BGM


Notes : Aagayam Odanju Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Snehan. ஆகாயம் உடஞ்சி பாடல் வரிகள்.


கண்ணம்மா கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிசரண்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Kannamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…
கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…

ஆண் : கண்ணீர் எல்லாம் ஒன்னா நின்னு…
உங்கிட்ட பேசனும் கண்ணே கண்ணு…

ஆண் : உன் பிஞ்சு பாதம் தீண்டாத நெஞ்சு…
தீ வச்சும் வேகாத ஈர பஞ்சு…

ஆண் : எந்தன் உயிராய் வந்த உயிரே…
கையில் தவழும் சாமி நீதானே…

BGM

ஆண் : கண்ணான கண்ணுக்கு இமை மேல பெருங்கோபம்…
தீராதா தீராதா…
சருகான உறவொன்னு உசுரான மலரொன்ன…
சேரேதா சேரேதா…

ஆண் : மகளோடா பிரிவென்ன லேசா…
உடையாத மனசென்ன மனசா…

ஆண் : அறை நொடியாவது பாரேன்…
சுடு சொல்லாவது சொல்லேன்…
என் மனசோட காயங்கள் ஆற…

ஆண் : போற உயிரே போற உயிரே…
பெத்த நொடிதான் திரும்பி வாராத…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…
கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…


Notes : Kannamma Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Pa. Vijay. கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்.


நேற்று வரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Netru Varai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

ஆண் : அனலாகவே வேகும் பனிபோல மோதும்…
மழை கால மேகம் கண்டேன்…
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்…
உனை தேடி கண்டு கொண்டேன்…

ஆண் : பேசும் போதிலே கேளா ஒலி…
பார்வை ஆகுமே தீபாவளி…
உன்னை போல யாருமில்லை என் இறைவி…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

BGM

ஆண் : மௌனம் என்னும் உன் மொழியில்…
மழலையாய் ஆகி பேசுகிறாய்…
ஒலிகளினால் நம் உலகில்…
கவிதை சாயம் பூசுகிறாய்…

ஆண் : கனவா நனவா தெரியா நிலையே…
பகலாய் இரவாய் பழகும் கலையே…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

BGM

ஆண் : என்னது காற்றில் நீ கரைந்தாய்…
என்னது வானம் நீ அளந்தாய்…
என்னது வாசல் நீ திறந்தாய்…
எனது ஓசை நீ உணர்ந்தாய்…

ஆண் : ஒரு நாள் நிழலாய்…
தரையில் இருந்தாய்…
பிறகு என் மனதில்
நிலவாய் நிறைந்தாய்…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…


Notes : Netru Varai Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Thamarai. நேற்று வரை பாடல் வரிகள்.