Category Archives: நீர்ப்பறவை

ரத்த கண்ணீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திராஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Raththa Kanneer Song Lyrics in Tamil


ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர்தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஏன் இந்த கதி ஏன் இந்த விதி…
நொந்தேன் உயிர் நொந்தேன்…
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்…

ஆண் : என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை…
அடி இல்லை…
என் பாவங்களில் நீ பங்கு பெற…
நியாயம் இல்லை…

ஆண் : பாதைதான் காணாமல் பட்டம்தான் விடுகின்றேன்…
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்…
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஊர் பேசியதும் யார் ஏசியதையும்…
நெஞ்சை சுட வில்லை…
நீ துன்பமுற நான் கண்டுவர…
ஜீவன் இல்லை…

ஆண் : என் தண்டனையில் நீ வாடுவது குற்றம்…
என் குற்றம்…
என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை…
சுற்றும் சுற்றும்…

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்…
என் காதல் பொய் இல்லை…
சேற்றோடு பிறந்தாலும்…
தாமரையில் அழுக்கில்லை…
வா பெண்ணே உன்னைவிட்டால் வாழ்வில்லை…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர் தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ளமாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…


Notes : Raththa Kanneer Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. ரத்த கண்ணீர் பாடல் வரிகள்.


தேவன் மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவி.வி. பிரசன்னா & சைந்தவிஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Devan Magale Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

ஆண் : என்றோ அடி என்றோ…
உன் உயிரில் உரிமை தந்தாய்…
இன்றே அடி இன்றே…
உடல் உரிமை தந்தாய்…

பெண் : நுனியில் விரல் நுனியில்…
ஒரு நூதன தீண்டல் செய்தாய்…
அடியில் உயிர் அடியில்…
ஓர் அற்புதம் செய்தாய்…

ஆண் : உன் ஆசை பாசை எல்லாம்…
பூட்டி கொண்டாயே…
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

பெண் : கண்ணீர் என் கண்ணீர்…
என் கன்னம் காயும் முன்னே…
பன்னீர் உன் பன்னீர்…
உயிர் பரவ கண்டேன்…

ஆண் : கொடியில் ஒரு கொடியில்…
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே…
மடியில் உன் மடியில்…
சிறு மரணம் கொண்டேன்…

பெண் : என் கர்தரங்கள் படைத்த…
வெற்று பாண்டம் நான்…
அதில் உன்னை ஊற்றி…
என்னை நிறைத்தாய்…

ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…


Notes : Devan Magale Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. தேவன் மகளே பாடல் வரிகள்.


para-para-song-lyrics-in-tamil

பற பற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜி.வி. பிரகாஷ் குமார்என்.ஆர்.ரகுநந்தன்நீர்ப்பறவை

Para Para Song Lyrics in Tamil


BGM

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

ஆண் : ஓ… அன்பே எந்தன் வாழ்வுக்கு…
ஆசிர்வாதம் நீயடி…
கண்ணீராடும் பிள்ளைக்கு…
நீயே காதல் தாயடி…

ஆண் : உன்னை காண மீண்டும் மீண்டும்…
கண்கள் தூண்டும்…
இருமுறை ஒரு வானவில் வருமா…

BGM

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

BGM

ஆண் : தேவாலயம் மெழுகும் நானே…
திரி ஏறும் தீயும் நீயே…
என் தேகம் கண்ணீர்விட்டு கரையுதே…

ஆண் : மீன் கொத்த செல்லும் பறவை…
மீன் வலையில் விழுந்தது போல…
வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே…

ஆண் : மழையில் கழுவிய மணலிலே…
தொலைந்த காலடி நானடி…
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு…
நிலைத்த முகவரி நீயடி…

ஆண் : பெட்ரோல் மீது தீயை போல…
உந்தன் மீது பற பற என பரவுது மனசு…

BGM

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிறு கிறுவென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

BGM

ஆண் : என் உலகம் கைவசம் இல்லை…
என் பெயரும் ஞாபகம் இல்லை…
சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்…

ஆண் : பெற்றவரை வீட்டில் மறந்தேன்…
மற்றவரை ரோட்டில் மறந்தேன்…
மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்…

ஆண் : மங்கை என் குரல் கேளடி…
நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி…
எனது அசுத்தங்கள் பாரடி…
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி…

ஆண் : பெட்ரோல் மீது தீயை போல…
உந்தன் மீது பற பற என பரவுது மனசு…

BGM

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

BGM


Notes : Para Para Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. பற பற பாடல் வரிகள்.