ஆண் : ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்… என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்… ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்… என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…
ஆண் : வந்துப்பாரு வந்துப்பாரு குதுர ஜாதிப்பொண்ணுடா… வட்டக்கண்ணு வட்டக்கண்ணு வயாகரா கண்ணுடா…
ஆண் : என்ன இந்த மாற்றமோ… எம்மனசு வழுக்குதே… கண்ணுரெண்டும் காந்தமோ… என்னைக்கட்டி இழுக்குதே…
ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை… நான் பார்த்தேனே… உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை… நான் சேர்ப்பேனே…
ஆண் : நீ வந்ததும் என்னானதோ… என் வாழ்க்கையே வேறானதோ…
ஆண் : என்ன இந்த மாற்றமோ… எம்மனசு வழுக்குதே… கண்ணுரெண்டும் காந்தமோ… என்னைக்கட்டி இழுக்குதே…
பெண் : உன் புண் சிரிப்பில் என் உலகத்தையே… நான் பார்த்தேனே… உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை… நான் சேர்ப்பேனே…
பெண் : நீ வந்ததும் என்னானதோ… என் வாழ்க்கையே வேறானதோ…
—BGM—
ஆண் : சின்னச்சின்னப் புன்னகையில்… என்னைப பரித்தாய்… வண்ண வண்ண கனவுகள்… கண்ணில் கொடுத்தாய்…
ஆண் : சிறிய இதயத்தில் பெரிய காதலை… தந்தாயடி என் அன்பே…
பெண் : மெல்ல மெல்ல மனசுக்குள்… இடம் பிடித்தாய்… மின் மினிக்கும் மின்னலைப்போல்… ஒளிக்கொடுத்தாய்…
பெண் : உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்… வந்தாயடா என் அன்பே…
ஆண் : ஒரு பார்வைப் பார்க்கும் போதிலே… எந்தன் தாகம் வானம் ஏறுதே… மறு பாதிப்பார்க்கும் போதிலே… எந்தன் ஜென்ம சாபம் தீருமோ…
பெண் : என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல… நான் கேட்டேனே…
ஆண் : நீ வந்ததும் என்னானதோ… என் வாழ்க்கையே வேறானதோ…
ஆண் : என்ன இந்த மாற்றமோ… எம்மனசு வழுக்குதே… கண்ணுரெண்டும் காந்தமோ… என்னைக்கட்டி இழுக்குதே…
—BGM—
பெண் : சுற்றி உந்தன் முகம் அன்றி… ஏதும் இல்லையே… மற்றபடி வேற ஒன்னும்… தொல்லை இல்லையே…
பெண் : உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய்… திண்டாடுதே என் நெஞ்சம்…
ஆண் : நெற்றிப்பொட்டில் நேற்றுவரை… காய்ச்சல் இல்லையே… நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே…
ஆண் : உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய்… கொண்டாடுதே என் நெஞ்சம்…
பெண் : உனைப் பார்த்துக் கொஞ்சிப் பேசத்தான்… எந்தன் ஆசைத்தாவி ஓடுதே… உனைப் பார்த்துப் பேசும் நேரத்தில்… எந்தன் வார்த்தை ஊமையாகுதே…
ஆண் : கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா… உன் இதழ்கள் சொல்லும்…
பெண் : நீ வந்ததும் என்னானதோ… என் வாழ்க்கையே வேறானதோ…
ஆண் : என்ன இந்த மாற்றமோ… எம்மனசு வழுக்குதே… கண்ணுரெண்டும் காந்தமோ… என்னைக்கட்டி இழுக்குதே…
ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை… நான் பார்த்தேனே… உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை… நான் சேர்ப்பேனே…
பெண் : நீ வந்ததும் என்னானதோ… என் வாழ்க்கையே வேறானதோ…
Notes : Enna Indha Matrammo Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என்ன இந்த மாற்றமோபாடல் வரிகள்.