Category Archives: அபியும் நானும்

சின்னம்மா கல்யாணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகைலாஷ் ஹெர்வித்யாசாகர்அபியும் நானும்

Chinnamma Kalyanam Song Lyrics in Tamil


ஆண் : சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர… ஆஆ ஆஆ…

ஆண் : பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…

ஆண் : மலிவான பொருளுன்னு மறுக்காத நீ தாயி…
என் உசுர நான் தாரேன் ஏத்துக்க என் தாயி…


Notes : Chinnamma Kalyanam Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. சின்னம்மா கல்யாணம் பாடல் வரிகள்.


பச்சை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம்வித்யாசாகர்அபியும் நானும்

Pachhai Kaatre Song Lyrics in Tamil


ஆண் : மேரிய சோனியா ஆ ரபா…
தூகிமே லி மிலா ஆஆ ஆய்னே…
தேரேதித்த வோ நமே சந்தி…
மேரே தில் ருபா ஆஆ ஆய்னே…

BGM

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

ஆண் : சாட்டுக்கார தீ மகாராணியே…
புலியே படியசு ராணியே…
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா…
ஆஜூ குஷியவா நோமராவா…

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…

BGM

பெண் : ஊர்களை மாற்றி திரிந்திருந்தாலும்…
உடல்களுக்குள்ளே மதம் இல்லை…
பேர்களை மாற்றி நீ அழைத்தாலும்…
கடல்களுக்குள்ளே சுவர் இல்லை…

பெண் : காற்றின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்து விடும்…
காதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்…
இதில் சரி என்றும் தவர் என்றும் யார் சொல்வது…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

பெண் : பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…

BGM

பெண் : நேர் கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை…
வளைகின்ற நதியில் அழகதிகம் ஓயே…
வாழ்க்கையும் கூட வளைகின்ற நதிதான்…
திருப்பத்தில்தானே ருசி அதிகம்…

பெண் : உந்தன் பின்னால் எந்தன் வாழ்க்கை வருவதில்லை…
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை இல்லை…
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை…

ஆண் : துலிசோ லிபத்து ஆ சகியே…
பலி அஜுனோ பஞ்சா பத்தியே…
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு…
சப்பு லங்கு தவா ஷாவா…

ஆண் : சாட்டுக்கார தீ மகாராணியே…
புலியே படியசு ராணியே…
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா…
ஆஜூ குஷியவா நோமராவா…


Notes : Pachhai Kaatre Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. பச்சை காற்றே பாடல் வரிகள்.


Moongil Vittu Song Lyrics in Tamil

மூங்கில் விட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்அபியும் நானும்

Moongil Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மூங்கில் விட்டு சென்ற பின்னே…
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன…
பெற்ற மகள் பிரிகின்றாள்…
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன…

ஆண் : காற்றைப் போல் வெயில் ஒன்று…
கடந்து போன பின்…
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன…

ஆண் : மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்…
சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன…

ஆண் : பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள…
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன…


Notes : Moongil Vittu Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் விட்டு பாடல் வரிகள்.


ஒரே ஒரு ஊரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகைலாஷ் ஹெர்வித்யாசாகர்அபியும் நானும்

Ore Oru Oorilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா…
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா…
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு…
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல…
கடவுளோட கண்ணு…

BGM

ஆண் : ஐயா இருக்காரே ஐயா…
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு…
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு…

ஆண் : காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு…
காச்சடிச்ச சூரியன கைது செய்ய பாப்பாரு…
மக மட்டும் மக மட்டும் உசுரா…
மத்ததெல்லாம் மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு…

ஆண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா…
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா…

BGM

ஆண் : அக்கா இருக்காங்களே எங்க அக்கா…
பூச்சிய பாத்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க…
பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க…

ஆண் : கொண்டதுவும் ஒரு குழந்தை…
கொடுத்தவணும் ஒரு குழந்தை…
தொலையட்டும் கழுதைங்கன்னு…
தொல்லை எல்லாம் பொறுப்பாங்க…

ஆண் : எங்கக்கா எங்களுக்கு பரிசா…
எங்கக்கா மனசோட இமயமலை சிறுசு…

BGM

குழு : தன நானா தும் தனும் தனும் தனும்…
தன நானா தும் தன தும் தனனும்…
தன நானா தும் தன தும்…
தனனும் தன நானா திர தும் தனனும் திகுரு…

குழு : தன தும் தன தும் தனனும்…
தன நானா திர தும் தன தும்…
தனனும் தகிட தன தும் தன தும்…
தன தும் தன தும் தனனும்…

ஆண் : அம்மா இருக்காளே எங்க அம்மா…
பொறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க…
பொறந்து வரும் போதே சிலரு வரம் தரவே வருவாங்க…

ஆண் : வரமா வந்தம்மா…
வாஞ்சை உள்ள தங்கம்மா…
சிட்டெரும்ப நசுக்காத சிங்கம்தான் எங்கம்மா…

ஆண் : மறு பிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும்…
இந்த மகளுக்கும் தாய்க்கும் நான் மகனாகவேணும்…

ஆண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா…
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா…
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு…
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல…
கடவுளோட கண்ணு…


Notes : Ore Oru Oorilae Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. ஒரே ஒரு ஊரிலே பாடல் வரிகள்.


வா வா என் தேவதையே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்அபியும் நானும்

Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : செல்வ மகள் அழுகை போல்…
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை…
பொன் மகளின் புன்னகைப்போல்…
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை…

ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல…
எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை…
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு…
முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை…

ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா…
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

BGM

ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல…
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்…
தெய்வ மகள் தூங்கயிலே…
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்…

ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது…
என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்…
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது…
இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்…

ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே…
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…

ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு…
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும் கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…


Notes : Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தேவதையே பாடல் வரிகள்.