ஆண் : சின்னம்மா கல்யாணம்… சீதனமா என்ன தர… சின்னம்மா கல்யாணம்… சீதனமா என்ன தர… ஆஆ ஆஆ…
ஆண் : பொன் இல்ல பொருள் இல்ல… பொட்டியில பணம் இல்ல… உசுர விட என் கிட்ட… ஒசந்த பொருள் ஏதும் இல்ல…
ஆண் : மலிவான பொருளுன்னு மறுக்காத நீ தாயி… என் உசுர நான் தாரேன் ஏத்துக்க என் தாயி…
Notes : Chinnamma Kalyanam Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. சின்னம்மா கல்யாணம்பாடல் வரிகள்.
ஆண் : காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு… காச்சடிச்ச சூரியன கைது செய்ய பாப்பாரு… மக மட்டும் மக மட்டும் உசுரா… மத்ததெல்லாம் மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு…
ஆண் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா… ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா…
—BGM—
ஆண் : அக்கா இருக்காங்களே எங்க அக்கா… பூச்சிய பாத்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க… பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க…
ஆண் : கொண்டதுவும் ஒரு குழந்தை… கொடுத்தவணும் ஒரு குழந்தை… தொலையட்டும் கழுதைங்கன்னு… தொல்லை எல்லாம் பொறுப்பாங்க…
ஆண் : எங்கக்கா எங்களுக்கு பரிசா… எங்கக்கா மனசோட இமயமலை சிறுசு…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு… மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும் கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
—BGM—
ஆண் : செல்வ மகள் அழுகை போல்… ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை… பொன் மகளின் புன்னகைப்போல்… யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை…
ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல… எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை… முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு… முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை…
ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா… என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
—BGM—
ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல… அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்… தெய்வ மகள் தூங்கயிலே… சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்…
ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது… என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்… மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது… இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்…
ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே… ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வா வா என் தேவதையே… பொன் வாய் பேசும் தாரகையே… பொய் வாழ்வின் பூரணமே… பெண் பூவே வா…
ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு… மயில் இறகால் மையிடவா… மார்புதைக்கும் கால்களுக்கு… மணி கொலுசு நான் இடவா…
Notes : Vaa Vaa En Devadhai Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தேவதையேபாடல் வரிகள்.