Category Archives: மொழி

மொழி – Mozhi (2007)

கண்ணால் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்மொழி

Kannaal Pesum Penne Song Lyrics in Tamil


ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…

ஆண் : எனது கோரிக்கை நீ கேளடி கேளடி…
உனது கோபங்களும் ஏனடி…
உனது சில்லென்ற கண்ணில் பாரடி பாரடி…
எனது சாபங்களை தீரடி…

ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…

BGM

ஆண் : நிலா பேசுவது இல்லை…
அது ஒரு குறை இல்லையே… ஆ…
குறை அழகென்று கொண்டால்…
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே…

ஆண் : பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றேன்…
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்…
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்…
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்…

ஆண் : வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி…
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி…

ஆண் : ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…

ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…

BGM

ஆண் : எங்கே குறுநகை எங்கே…
குறும்புகள் எங்கே கூறடி… ஓ…
கண்ணில் கடல் கொண்ட கண்ணில்…
புயல் சின்னம் ஏதோ தெரியுதடி…

ஆண் : செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்…
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்…
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்…
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்…

ஆண் : வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி…
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி…

ஆண் : ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…

ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…

ஆண் : எனது கோரிக்கை நீ கேளடி கேளடி…
உனது கோபங்களும் ஏனடி…
உனது சில்லென்ற கண்ணில் பாரடி பாரடி…
எனது சாபங்களை தீரடி…


Notes : Kannaal Pesum Penne Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. கண்ணால் பேசும் பாடல் வரிகள்.


செவ்வானம் சேலைகட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜெஸ்ஸி கிப்ட்வித்யாசாகர்மொழி

Sevvaanam Selai Katti Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வானம் சேலைகட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…

ஆண் : மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே…
கனல் மூண்டது கண்களிலே…
உயிர் வேகுது நெஞ்சினிலே…

ஆண் : யாரோ அவ யாரோ… யாரோ…
சொல்வாரில்லை… இல்லை இல்லை…

ஆண் : நேரில் கண்டு பேச… பேச…
நேரமில்லை… இல்லை இல்லை…

ஆண் : கண்ணில் வந்து போனால் கையில் இல்லை…

BGM

ஆண் : செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…

ஆண் : மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே…
கனல் மூண்டது கண்களிலே…
உயிர் வேகுது நெஞ்சினிலே…

BGM

ஆண் : யாரோ அவள் மங்கம்மாளின் வாளை கையில்…
வாங்கி வந்தவளோ…

BGM

ஆண் : யாரோ அவள் கண்ணகியின் பேத்தி என்று…
மண்ணில் வந்தவளோ…

BGM

ஆண் : சுப்ரமணிய பாரதியின் சோற்றை தின்று வந்தவளோ…
சந்திரனும் சூரியனும் கூடி பெற்ற பெண் இவளோ…

ஆண் : கல்லுல மல்லிகையோ…
முள்ளுல தாமரையோ…
சூடான சுந்தரியோ… ஓஓஓஓ…

ஆண் : கம்ப்யூட்டர் கற்றவளோ…
கராத்தே கற்றவளோ…
கவி பாடும் தேவதையோ…

ஆண் : யாரேனும் கேட்டு சொல்லுங்களேன்…

BGM

ஆண் : செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…

BGM

ஆண் : பார்த்தால் அவள் பேரை கேட்டு…
பேரின் பின்னால் என் பேர் இணைப்பேன்…

BGM

ஆண் : கேட்டால் அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டு கட்டி…
பாடல் இசைப்பேன்…

ஆண் : அவ்வை சொன்ன தமிழையும்…
அங்கே இங்கே தொட்டு வைப்பேன்…
ஐஸ்வர்யாவின் காதலையும்…
அக்கு அக்காய் பிட்டு வைப்பேன்…

ஆண் : சொல்லாலே சொக்க வைப்பேன்…
ஜோக்காலே சிக்க வைப்பேன்…
சொல்லாமல் தொட்டு வைப்பேன்…

ஆண் : வெக்கங்கள் கிள்ளி வைப்பேன்…
ஆனந்தம் அள்ளி வைப்பேன்…
ஐ லவ் யூ சொல்ல வைப்பேன்…

ஆண் : கண்ணோடு கண்கள் வைப்பேனே…

BGM

ஆண் : செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே…
வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…
பார்வையிலே…

ஆண் : மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே…
சாலையிலே…
கனல் மூண்டது கண்களிலே…
கண்களிலே…
உயிர் வேகுது நெஞ்சினிலே…
நெஞ்சினிலே…

ஆண் : யாரோ அவ யாரோ… யாரோ…
சொல்வாரில்லை… இல்லை இல்லை…

ஆண் : நேரில் கண்டு பேச… பேச…
நேரமில்லை… இல்லை இல்லை…

ஆண் : கண்ணில் வந்து போனால் கையில் இல்லை…

BGM


Notes : Sevvaanam Selai Katti Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. செவ்வானம் சேலைகட்டி பாடல் வரிகள்.


காற்றின் மொழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபல்ராம்வித்யாசாகர்மொழி

Katrin Mozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…
கடலின் மொழி அலையா நுரையா…
காதல் மொழி விழியா இதழா…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…

BGM

ஆண் : காற்று வீசும் போது திசைகள் கிடையாது…
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது…
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது…
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது…
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது…
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி…

BGM

ஆண் : வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்…
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்…
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்…
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்…
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…
கடலின் மொழி அலையா நுரையா…
காதல் மொழி விழியா இதழா…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி…


Notes : Katrin Mozhi Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. காற்றின் மொழி பாடல் வரிகள்.