Category Archives: ராம்

ராம்

விடிகின்ற பொழுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாராம்

Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil


BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம்…
பூகம்பம் இன்றி சிதறுதடா…
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே…
எனை இன்னும் வாழ சொல்லுதடா…

பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்…
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்…

பெண் : காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி…
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி…
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே…
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே…

BGM

பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்…
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா…
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்…
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா…

பெண் : யாரிடம் உந்தன் கதை பேச முடியும்…
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்…

பெண் : பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா…
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா…
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா…
உன்னை விட கல்லறையே பக்கமடா…

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…


Notes : Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. விடிகின்ற பொழுது பாடல் வரிகள்.


நிழலினை நிஜமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்விஜய் யேசுதாஸ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாராம்

Nizhalinai Nijamum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM

ஆண் : நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க…
விதி செய்த சதியா தெரியலம்மா…
கடல் தூக்கும் அலையும் கடலில்தான் சேரும்…
அது போல என்னையும் சேத்துக்கம்மா…

ஆண் : உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது…
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்…
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா…
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா…
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா…
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா… ஆ…

BGM

ஆண் : திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு…
எங்கேயோ பயணம் தொடருதம்மா…
என்னோட மனசும் பழுதாகி போச்சு…
சரி செய்ய வழியும் தெரியலம்மா…

ஆண் : சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா…
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா…
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா…
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா…
தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா…
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா…

BGM

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

BGM


Notes : Nizhalinai Nijamum Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. நிழலினை நிஜமும் பாடல் வரிகள்.


aarariraro-song-lyrics-raam

ஆராரிராரோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே.ஜே. யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாராம்

Aarariraro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

ஆண் : வாழும் காலம் யாவுமே…
தாயின் பாதம் சொர்க்கமே…
வேதம் நான்கும் சொன்னதே…
அதை நான் அறிவேனே…

ஆண் : அம்மா என்னும் மந்திரமே…
அகிலம் யாவும் ஆள்கிறதே…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

—BGM—

ஆண் : வோ் இல்லாத மரம்போல் என்னை…
நீ பூமியில் நட்டாயே…
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்…
உன் உயிர் நோக துடித்தாயே…
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்…
நீ சொல்லி தந்தாயே…

ஆண் : பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்…
வழி நடத்திச் சென்றாயே…
உனக்கே ஓா் தொட்டில் கட்டி…
நானே தாயாய் மாறிட வேண்டும்…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…

—BGM—

ஆண் : தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்…
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா…
மண் பொன் மேலே ஆசை துறந்த…
கண் தூங்காத உயிர் அல்லவா…

ஆண் : காலத்தின் கணக்குகளில்…
செலவாகும் வரவும் நீ…
சுழல்கின்ற பூமியின் மேலே…
சுழலாத பூமியும் நீ…

ஆண் : இறைவா நீ ஆணையிடு…
தாயே எந்தன் மகளாய் மாற…

ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…


Notes : Aarariraro Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. ஆராரிராரோ பாடல் வரிகள்.