Category Archives: ஐயா

Ayyathorai Song Lyrics in Tamil

அய்யாதுரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி.பலராம் & ராகவேந்தர்பரத்வாஜ்ஐயா

Ayyathorai Song Lyrics in Tamil


ஆண் : அய்யாதுரை அய்யாதுரை…
நீ பல்லாண்டு வாழ்க அய்யாதுரை…
கண்ணத்தொர கண்ணத்தொர…
உன் பார்வை பட்டு பூத்திர…

பெண் : கோவில் குளம் கண்டதில்லை…
இப்படி ஓர் சாமி…
புண்ணியம் தான் செஞ்சிருக்கு…
தென்காசி பூமி…

பெண் : கோவில் குளம் கண்டதில்லை…
இப்படி ஓர் சாமி…
புண்ணியம் தான் செஞ்சிருக்கு…
தென்காசி பூமி…

ஆண் : வானம் தேஞ்சு…
போச்சு பூமி காஞ்சு…
போச்சு ஏழை எங்கள ஏமாத்தி…

ஆண் : கிழக்கு இருட்டி போச்சு…
மேக்க மறைஞ்சு போச்சு…
காலம் எங்கள ஏமாத்தி…

ஆண் : மண்ணோடு மக்களையும் தத்தெடுத்த ராசா…
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா…

ஆண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…

BGM

ஆண் : ஊருக்குள்ள ஆறு வந்து…
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா…
தெருக்குள்ள சாமி வந்து…
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா…

ஆண் : நெல்ல வெதைச்சு பார்த்தா…
இப்போ சோறு விளையுது ஆத்தா…
புல்ல வெதைச்சு பார்த்தா…
இப்போ எள்ளு விளையுது ஆத்தா…

பெண் : கண்ணுக்கெட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல…
நெஞ்சுக்கெட்டும் தூரம் துன்பம் ஏதும் இல்ல…

ஆண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…

BGM

பெண் : பாறை கல்லும் பாதம் பட்டு…
பச்ச நீளம் ஆனதே…
பட்டினியும் தூரமாக ஓடி போனதே…

பெண் : தூர பட்டு பட்ட போல…
எங்கள் நெஞ்சு ஆனதே…
தொண்டை குழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே…

BGM

ஆண் : பூமியிலும் களவு வரும்…
உங்கள் நட்புல பழுதில்லையே…
பசும் பாலும் கர வடியும்…
உங்க உறவில குறை இல்லையே…

ஆண் : வெள்ள வேட்டி கட்ட…
நல்ல வெள்ள உள்ளம் வேணும்…
உங்க முகத்த கண்டா…
எங்க தாய போல தோணும்…

பெண் : நல்லதையும் செய்ய கைய நீட்டும் சாமி…
உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி…

ஆண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…

பெண் : அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை…


Notes : Ayyathorai Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Na. Muthukumar. அய்யாதுரை பாடல் வரிகள்.


அத்திரி பத்திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜனனி பரத்வாஜ்பரத்வாஜ்ஐயா

Athiri Pathiri Song Lyrics in Tamil


குழு : ஓஹோ ஓஹோ… குவாக் குவாக்…
ஓஹோ ஓஹோ… குவாக் குவாக்…
ஓஹோ ஓஹோ… போறா போறா…
செல்வி இப்போ திருமதி ஆக போறா…

BGM

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

பெண் : என் படிப்ப…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : என் மனச…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : கணக்கு புக்க தொறந்தா…
உன் காதல் முகம் தோணும்…
காம்பஸ் போலதானே…
என் கண்ணு உன்ன சுத்தும்…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

BGM

பெண் : பரீட்சை எழுதும் நேரம்…
உன் சிரிப்புதானே…
குழு : நெனச்சாலே…

பெண் : பிள்ளையார் சுழிய நெனச்சி…
உன் பேரைதானே…
குழு : வரைஞ்சாலே…

பெண் : ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு…
உன் பேர்தான் பேர்தான் இனிமேலே…
கிளி பிள்ளையாய் தினமும் தினமும் அதை…
சொல்வேன் சொல்வேன் தன்னாலே…

பெண் : திருக்குறளாய் திருக்குறளாய்…
உந்தன் குரல்தான்…
குழு : உனக்கு உனக்கு…

பெண் : தலைநகரம் தலை நகரம்…
உந்தன் தெருதான்…
குழு : உனக்கு உனக்கு…
உயிரே உயிரே…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

BGM

பெண் : ஒருநாள் ஒருநாள் ஒருநாள்…
ஓரு காதல் பூதம்…
குழு : புடிச்சிருச்சு…

பெண் : மறுநாள் மறுநாள் மறுநாள்…
அது உன்பேர் சொல்லி…
குழு : கடிச்சிருச்சு…

பெண் : உதடுகளை உணவாய் உணவாய்…
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்…
ஊருசனம் உறங்கிய பின்னே…
அது முழிச்சி மெதக்கும் கதவோரம்…

பெண் : குலசாமி திருநீறு வச்சு பார்த்தேன்…
குழு : பலனே இல்ல…

பெண் : குத்தாலம் கோவிலில் தாலி கட்ட…
குழு : சொல்லுது மெல்ல…
உயிரே உயிரே…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : அத்திரி பத்திரி கத்திரிக்கா…
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா…

பெண் : என் படிப்ப…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : என் மனச…
குழு : ஓஹோ ஓஹோ…
பெண் : நான் தொலைச்சேன்…
குழு : ஓஹோ ஓஹோ…

பெண் : கணக்கு புக்க தொறந்தா…
உன் காதல் முகம் தோணும்…
காம்பஸ் போலதானே…
என் கண்ணு உன்ன சுத்தும்…

பெண் : என் மாமா மகன் நீங்க…
என் அத்தான் முறை தாங்க…
ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ…

பெண் : ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ எப்போ…

பெண் : ஹே… டும் டும் பீப்பீ… டும்டும் பீப்பீ…
குழு : எப்போ எப்போ… எப்போ எப்போ…


Notes : Athiri Pathiri Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa. Vijay. அத்திரி பத்திரி பாடல் வரிகள்.


தாமிரபரணி ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணகுமார் குன்னத் & ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்ஐயா

Thamirabarani Raani Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் தாமிரபரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

பெண் : அட வல்ல நாட்டு மலையே…
என் வாலிப துரையே…
நான் தாலி கட்ட…
சம்மதம் சொன்னேன் வா வா…

ஆண் : ஓ… ஜோசியத்த பார்த்தாச்சு…
ஜாதகமும் சேர்ந்தாச்சு…
பத்திரிகை அடிச்சாச்சு…
பந்த கால் நட்டாச்சு…

பெண் : அச்சதையும் போட்டாச்சு…
அப்புறம் என்னாச்சு…

ஆண் : ஏ… தாமிரபரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

BGM

பெண் : மணக்க மணக்க அயிர மீன வாங்கி…
ருசி ருசியாக சமைப்பேன்…

பெண் : நான் தேனையும் ஊத்தி வருப்பேன்தானே…
உனக்கின்னு காத்து கெடப்பேன்…

ஆண் : கம்ப கூழ நீயும் கரைச்சி தந்தா…
அதுதான் சக்கர பொங்கல்…

ஆண் : உன் கன்னத்தில் தேச்சு வென் பளிங்காச்சு…
கதவோரத்து செங்கல்…

பெண் : குழம்புக்கு நான் அரைச்ச மஞ்சள்…
செவக்கயிலே உன் நெனப்பு…
கூட்டான்சோறு ஆக்கையிலே…
பானையில் பொங்கும் உன் சிரிப்பு…

ஆண் : ஏ… பாலூத்தி செஞ்சானா…
பனி ஊத்தி செஞ்சானா…
உன் உதடு ஒவ்வொன்னா…
தேன் ஊத்தி செஞ்சானா…

பெண் : ஓ… உதிரத்து உரியாக…
உள் மனம் ஆடுதய்யா…

ஆண் : ஏ… தாமிர பரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட காத்துகிடக்கேன் வா வா…

BGM

பெண் : ஹே… கடலை காட்டில் நடந்து போகும் போது…
தொலைஞ்சது வெள்ளி கொலுசு…

பெண் : உன் கை விரல் கோத்து நடக்கும் போது…
காணாம போச்சு மனசு…

ஆண் : நூறு ஏக்கர் மல்லி தோட்டம் போட்டேன்…
வாசனை என்ன வாசம்…

ஆண் : உன் ஏழரை இஞ்சு இடுப்பின் வாசம்…
ஆளையும் தூக்கி வீசும்…

பெண் : நீ கடிச்ச வேப்பம் குச்சி…
நட்டு வச்சா துளிர்க்குதய்யா…
உன் பாதத்தை நெனச்ச ஓட தண்ணி…
பதநீராக இனிக்குதையா…

ஆண் : ஏ… மயிலிறகு கண்ணால…
மனசுக்குள்ள கீறுறியே…
கேழ் வரகு கூழாக…
என் உசுர கிண்டுறாயே…

பெண் : ஏ… என் ரவிக்கையில போட்ட கொக்கி…
பட்டுனு தெறிக்குதய்யா…

ஆண் : ஏ… தாமிர பரணி ராணி…
செந்தாமரை மேனி…
நான் தாலி கட்ட…
காத்துகிடக்கேன் வா வா…

பெண் : அட வல்ல நாட்டு மலையே…
என் வாலிப துரையே…
நான் தாலி கட்ட…
சம்மதம் சொன்னேன் வா வா…

ஆண் : ஓ… ஜோசியத்த பார்த்தாச்சு…
ஜாதகமும் சேர்ந்தாச்சு…
பத்திரிகை அடிச்சாச்சு…
பந்த கால் நட்டாச்சு…

பெண் : அச்சதையும் போட்டாச்சு…
அப்புறம் என்னாச்சு…


Notes : Thamirabarani Raani Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa.Vijay. தாமிரபரணி ராணி பாடல் வரிகள்.


சுத்திப்போட வேணாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீ மதுமிதா & திப்புபரத்வாஜ்ஐயா

Suthipoda Venama Song Lyrics in Tamil


BGM

பெண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம்…
பச்ச நெல்லாக…
நம்ம பேரை நடவு செய்யுதய்யா…

பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்…
துட்டு இல்லாம…
நம்ம சேதி வாங்கி போகுதையா…

ஆண் : அட ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல…
நம்ம கதைய பேசிதான்…
காத்தே வீசுது…

ஆண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

BGM

ஆண் : மகளா மருமகளா…
என் வீட்டுக்கு வருவ…
விளக்கா குத்து விளக்கா…
நீ வெளிச்சம் வீசுவ…

பெண் : புருஷன் தோளில…
நான் ஊஞ்சல் ஆடுவேன்…
புகுந்த வீட்டுக்குள்ள…
நான் புண்ணியம் சேமிப்பேன்…

ஆண் : அழகா என்ன அதட்டி…
நீ கட்டளை போடுவ…
குளிச்சா தலை துவட்டி…
நீ முத்தமும் வாங்குவ…

பெண் : தெனமும் தெனமும் நான்தான்…
வந்து வெத்தல மடிக்கணும்…
பாதி கடிச்சி நீதான்…
மிச்சம் எனக்கு கொடுக்கணும்…

ஆண் : அடி இப்படி ஒரு ஜோடியானு…
உலகமும் கண்ணு வைக்கணும்…

BGM

ஆண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

BGM

ஆண் : அடியே இளம் கொடியே…
உன் மடியில் இடம் கொடு…
முடிஞ்சா உன் மார்பில்…
கொஞ்சம் முனங்க வழி கொடு…

பெண் : ஆ… இரவு நேரம் வந்தா…
உன் மெத்தையில் இடம் கொடு…
விடியும் நேரம் ஆனா…
என் சேலைய நீ கொடு…

ஆண் : கனியே மச்ச கனியே…
உன் கன்னத்தின் ருசி கொடு…
கடைஞ்ச வெள்ளி சிலையே…
உன் கழுத்தில் மனம் கொடு…

பெண் : உதட்டில் கொடுத்த முத்தம்…
அத திருப்பி தான் கொடு…
வெட்கமும் எனக்கு வந்தா…
நீ இரண்டுதான் கொடு…

ஆண் : எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்…
ஆளுக்கொன்னா பெத்து கொடு…

BGM

பெண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம்…
பச்ச நெல்லாக…
நம்ம பேரை நடவு செய்யுதய்யா…

பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்…
துட்டு இல்லாம…
நம்ம சேதி வாங்கி போகுதையா…


Notes : Suthipoda Venama Song Lyrics in Tamil. This Song from Ayya (2005). Song Lyrics penned by Pa.Vijay. சுத்திப்போட வேணாமா பாடல் வரிகள்.


ஒரு வார்த்தை கேட்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிருஷ்ணகுமார் குன்னத் & சாதனா சர்கம்பரத்வாஜ்ஐயா

Oru Vaartha Kekka Song Lyrics in Tamil


பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

BGM

பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…
மணமாலை ஒன்ன பூ பூவாய் கோர்த்திருந்தேன்…
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டி கிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

BGM

பெண் : ஊருக்குள்ள ஓடும் தெருவில்…
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்…
நீ நடந்த சுவடுகள் இருந்தால்…
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்…

ஆண் : இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட…
அது திறக்கல என்றதுமே உடைச்சுப்புட்ட…

பெண் : நீ கிடைக்க வேண்டும் என்று…
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்…
பேச்சியம்மன் கோயில் சாமி…
பேப்பர் சாமி ஆனது என்ன…

ஆண் : கண்ணுக்குள்ள ஓடிய உன்ன துரத்த…
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச…
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட…
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச…

பெண் : ஓ… நீ கொடுத்த கல் கூட…
செங்கல் சாமி ஆனதய்யா…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

BGM

பெண் : அடுத்த வீட்டு கல்யாணத்தின்…
பத்திரிக்கை பார்க்கும்போது…
நமது பேரை மணமக்களாக…
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்…

ஆண் : நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு…
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு…

பெண் : கட்டபொம்மன் உருவம் போல…
உன்ன வரைந்து மறைத்தே வைத்தேன்…
தேசபற்று ஓவியம் என்று…
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட…

ஆண் : அணைகட்டு போலவே இருக்கும் மனசு…
நீ தொட்டு ஒடஞ்சது என்ன…
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்…
பூ பட்டு சரிஞ்சது என்ன…

பெண் : வேப்ப மரம் சுத்தி வந்தேன்…
அரச மரமும் பூத்ததய்யா…
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…

பெண் : இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

ஆண் : அந்த பார்வை பார்க்க முடியாம…
நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…

பெண் : சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிகிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

BGM


Notes : Oru Vaartha Kekka Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa Vijay. ஒரு வார்த்தை கேட்க பாடல் வரிகள்.