Category Archives: புதிய கீதை

Annamalai Thambi Song Lyrics in Tamil

அண்ணாமல தம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் சாகர்திப்பு & தேவன்யுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Annamalai Thambi Song Lyrics in Tamil


ஆண் : எயிட் ஏழு சிக்ஸ் அஞ்சு…
ஃபோர் மூணு டூ ஒன்னு…

BGM

ஆண் : ஹே… அண்ணாமல தம்பி இங்கே…
ஆட வந்தேன்டா…
உங்க தளபதி நான் கானா பாட்டு…
பாட வந்தேன்டா…
டீலு வேணாம்டா… டோலு பூடும்டா…

ஆண் : பட்ட கெளப்பும் கானாவே தான்டா…
கிட்ட வந்து நீ அல்டாதடா…
பட்டி தொட்டி எல்லாமே கானா…
பிச்சு உதரும் கில்லாடி நான்…

ஆண் : ஹே… அண்ணாமல தம்பி இங்கே…
ஆட வந்தேன்டா…
உங்க தளபதி நான் கானா பாட்டு…
பாட வந்தேன்டா…
டீலு வேணாம்டா… டோலு பூடும்டா…

ஆண் : பட்ட கெளப்பும் கானாவே தான்டா…
கிட்ட வந்து நீ அல்டாதடா…
பட்டி தொட்டி எல்லாமே கானா…
பிச்சு உதரும் கில்லாடி நான்…

BGM

ஆண் : பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்டா…
பெஸ்ட் பிட் பாய்ஸ்டா…
உங்க கானாதான் வெறி நாயின் நாய்சுடா…

ஆண் : வெஸ்டர் நீ கேளு…
மச் பெட்டர் சாய்ஸ்டா…
பைவ் போர் த்ரீ டூ ஒன்…

ஆண் : ஹே… முக்காளிக்கு மூணு காலுடா…
நீ குந்திக்கிற நாற்காலிக்கு நாலு காலுடா…
அட மெய்யாலுமா தக்காளிக்கு காலு இல்லடா…
அடஉங்கப்புரானே என்ன வெல்ல ஆளு இல்லடா…

ஆண் : எதிரு போட்டியின்னு வந்தாலே நான் ரெடிடா…
நான் ஜூட்டு மச்சி கானாவின் சாரதிடா…
நீ தோத்துபுட்டு ஓடனும்டா… எகிறி ஓடனும்டா…
ஹா காட்டாதே ஜிக்கிரி ஜிக்கிரி ஜாப்பு…

BGM

ஆண் : யூ.எஸ்.எ வில் யூரோப்பாவில்…
நியூசிலாந்தில் இங்கிலாந்தில்…
உலகம் முழுதும் ரப் வைரஸ் பார்ம் ஆனதே…
புதிய ராகம் புதிய வேகம்…
அதிக தாளம் ஹார்ட் பீட்டும்…
நிமிடம் ஒன்று நின்றிங்குதான் கேட்குதே…

ஆண் : உங்கள் கானாவில் ஸ்வீட் இல்லை…
பீட் இல்லை…
சூடேற்றி மூடேற்றும் பீல் இல்லை…
ஓர் டிஸ்கோ இல்லை…
பிரேக் டான்ஸும் இல்லை…
ஹேய்… பாடாமல் வாய் மூடி போடா நீயும்…

BGM

ஆண் : ஹே… குஜால் ஆனா கானா…
பேஜாரானா கானா…
புட்டுகினு போனாலே பூந்தமல்லி கானா…
வெட்சிக்காத வீணா ஆட்சிக்கத்தான் வேணா…
ஹே சுத்தி வந்தேன் சீனா…
நான் சுங்கு வச்ச பானாடா…

BGM

ஆண் : ஹே அண்ணாமல தம்பி இங்கே…
ஆட வந்தேன்டா…
தளபதி நான் கானா பாட்டு…
பாட வந்தேன்டா…

குழு : டீலு வேணாம்டா…
டோலு பூடும்டா…

ஆண் : பட்ட கெளப்பும் கானாவே தான்டா…
கிட்ட வந்து நீ அல்டாதடா…
பட்டி தொட்டி எல்லாமே கானா…
பிச்சு உதரும் கில்லாடி நான்…

BGM


Notes : Annamalai Thambi Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Vijay Sagar. அண்ணாமல தம்பி பாடல் வரிகள்.


நான் ஓடும் நதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & திப்புயுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Naan Odum Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

ஆண் : எந்த வேலையும் செய்வேன்…
அதில் ஏற்றத்தாழ்வு ஏது…
அட உன்னை நம்பியே நின்றால்…
உனை ஊரும் பேசாதோ…

ஆண் : நெற்றி வேர்வையை சிந்த…
ஒரு நேரம் காலம் என்ன…
அட வெற்றி என்று தென்றல்…
நம் வாசல் வந்து வீசாதோ…

ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

BGM

ஆண் : போகவில்லை நேரம்…
என பேசாதீர்கள் யாரும்…
அது போதவில்லை என்றே சொல்லி…
வேலை செய்யுங்கள்…

ஆண் : அட இமயம் என்ன இமயம்…
நீ இதயம் வைத்தால் அதையும்…
அள்ளி ஏந்தக்கூடும் உள்ளங்கையில்…
இன்று நீங்கள்…

ஆண் : மனிதன் என்னும் சொல் பெரியதடா…
கொடுத்திடு அதற்க்கொரு பெருமையடா…

குழு : பிறர் கண்ணிலே வரும் நீர்த்துளி…
இந்த கைகள் துடைக்கும்…
அந்த கைகள்தான் அன்பு காவியம்…
இந்த மண்ணில் படைக்கும்…

ஆண் : ஹோய்… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

BGM

ஆண் : என்ன நேரும் நாளை…
என எடுத்துக்கூறும் மூளை…
அந்த தெய்வம் இங்கே…
யாருக்குமே தந்ததில்லையே…

ஆண் : அட இன்றே இப்போ இங்கு…
என எதையும் செய்தால் நன்று…
நான் சொல்லும் வார்த்தை நண்பா…
கொஞ்சம் சிந்திப்பாயே…

ஆண் : இருக்கின்ற பொழுதை பயன்படுத்து…
தடைகளை உடைத்து தலை நிமிர்த்து…

குழு : இந்த வேள்விதான்…
இந்த வேளைதான்…
இனி போனால் வருமா…

குழு : இது ஒன்று தான்…
நிஜம் என்றுதான்…
நாம் வாழ்வோம் நலமா…

ஆண் : ஹோய்… ஹோய்… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

ஆண் : எந்த வேலையும் செய்வேன்…
அதில் ஏற்றத்தாழ்வு ஏது…
அட உன்னை நம்பியே நின்றால்…
உனை ஊரும் பேசாதோ…

ஆண் : நெற்றி வேர்வையை சிந்த…
ஒரு நேரம் காலம் என்ன…
அட வெற்றி என்று தென்றல்…
நம் வாசல் வந்து வீசாதோ…

ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

BGM


Notes : Naan Odum Nadhi Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Vaali. நான் ஓடும் நதி பாடல் வரிகள்.


வசியக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & சித்ரா சிவராமன்யுவன் சங்கர் ராஜாபுதிய கீதை

Vasiyakaara Song Lyrics in Tamil


BGM

ஆண் : வசியக்காரி வசியக்காரி…
வலைய வீசி போறாளே…
வசியக்காரி வசியக்காரி…
வளைச்சி போட்டு போறாளே…

ஆண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடி…
ஏனோ ஏனோ உயிர் நோகுதடி…
ஏனோ ஏனோ பறி போகுதடி…
யே யே யே வைக்காதே மை மை…

பெண் : வசியக்காரா வசியக்காரா…
வசியம் மூட்ட போறேண்டா…
வசியக்காரா வசியக்காரா…
ருசிய காட்ட போறேண்டா…

பெண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடா…
ஏனோ ஏனோ உயிர் நோகுதடா…
ஏனோ ஏனோ சுகம் ஊருதடா…
யே யே யே வைப்பேனே மை மை…

BGM

ஆண் : உடலை உனதுடலை…
நான் அடிமை செய்ய வந்தேனே…

பெண் : உயிரை எனதுயிரை…
உன் இளமைக்கென்று தந்தேனே…

ஆண் : பருவம் என்னும் கடையில் என்னை…
அடகு வைத்து சென்றாயே…

பெண் : வெறி நீ கொண்டு முத்ததாலே…
மூழ்கடித்து கொன்றாயே…

ஆண் : காதல் என்றும் தும்மல் போல…
காமன் என்றும் விக்கல் போல…
தழுவ தழுவ இதயம் நழுவியதே…
வைக்காதே மை மை…

BGM

பெண் : வசியக்காரா வசியக்காரா…
வசியம் மூட்ட போறேண்டா…
வசியக்காரா வசியக்காரா…
ருசிய காட்ட போறேண்டா…

BGM

பெண் : இரவை நள்ளிரவை…
உன் உரிமை என்று கொண்டாடு…

ஆண் : அழகை உனதழகை…
நீ அள்ளி தந்து திண்டாடு…

பெண் : புடவை எங்கும் புதுமை செய்து…
பூப்பறித்து கொண்டாயே…

ஆண் : உடை களைந்து என்னில் உன்னை…
ஒப்படைத்து நின்றாயே…

பெண் : மார்பு மீது மெத்தை போடு…
ரோம காலில் வித்தையாடு…
விடிய விடிய விரதம் முடிகிறதே…
வைப்பேனே மை மை…

ஆண் : வசியக்காரி வசியக்காரி…
வலைய வீசி போறாயே…
வசியக்காரி வசியக்காரி…
வளைச்சி போட்டு போறாயே…

ஆண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடி…
ஏனோ ஏனோ உயிர் நோகுதடி…
ஏனோ ஏனோ பறி போகுதடி…
யே யே யே வைக்காதே மை மை…

பெண் : வசியக்காரா வசியக்காரா…
வசியம் மூட்டி போறேண்டா…

ஆண் : வசியக்காரி வசியக்காரி…
வளைச்சி போட்டு போறாளே…


Notes : Vasiyakaara Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Yugabharathi. வசியக்காரா பாடல் வரிகள்.


மெர்குரி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்நிதீஷ் கோபாலன், பவதாரிணி & போனி சக்கரவர்த்தியுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Mercury Poove Song Lyrics in Tamil


பெண் : என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன்…
என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன்…
காதல் வந்ததும் எந்தன் சுவாசமும்…
என்னைக் கொல்வது ஏன்…

BGM

ஆண் : நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…
நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…

ஆண் : இந்த காதல் அது மனசில் வருமே…
அது வந்து செய்யும் வலிகளும் சுகமே…
காதல் வந்ததும் காற்றின்…
நீரில் கால்கள் சென்றிடுமே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…
அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…

ஆண் : இந்த காதலும் வந்ததென்ன எனக்கும்…
ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும்…
குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

BGM

பெண் : கவிதைகள் வாசிக்க…
அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு…
காற்றை நான் சுவாசிக்க…
அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு…

பெண் : சூரியன் என்னை சுடுகின்றது…
உனது உள்ளங்கை ஈரம் கொடு…
குளிரிலே ரத்தம் உறைகின்றது…
உனது இதயத்தின் வெப்பம் கொடு…

ஆண் : ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…
ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…

ஆண் : அட குத்தவில்லை முட்கள் இங்கே…
இது ஏன் என்று கேட்டேன் அன்பே…
காதல் என்றுதான் காற்றும்…
பூவும் சேர்ந்து சொல்கிறதே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…


Notes : Mercury Poove Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Pa. Vijay. மெர்குரி பூவே பாடல் வரிகள்.


மனசே இள மனசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்போனி சக்ரவர்த்தி, திப்பு & சுவர்ணலதாயுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Manase Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசே இள மனசே…
மலரும் பூ மனசே…
மனதில் நினைப்பதெல்லாம்…
நடக்கும் நாள் இதுவே…

ஆண் : மனசே இள மனசே…
மலரும் பூ மனசே…
மனதில் நினைப்பதெல்லாம்…
நடக்கும் நாள் இதுவே…

ஆண் : ஒரு சொர்க்கத்திலே இது…
உருவான உறவா…
இல்லை சொர்க்கத்தையே இங்கு…
உருவாக்கும் உறவா…

ஆண் : ஆனந்தம் அலை மோதும்…
கண்ணில் எந்நாளும்…
கொண்டாட்டம் கும்மாளம்…
மண்ணில் எப்போதும்… ஹே…
கொண்டாட்டம் கும்மாளம்…
மண்ணில் எப்போதும்…

ஆண் : என்றும் சந்தோஷம்…
எங்கும் சந்தோஷம்…
வானம் வரைக்கும்…
அடடா எங்கள் சந்தோஷம்…

ஆண் : ஒரு வயசு ஆனது போல்…
இன்பம் இருக்கு…
ஒரு கோடி காலம் வாழ…
ஆசை எனக்கு… ஹே…
ஒரு கோடி காலம் வாழ…
ஆசை எனக்கு…

BGM

ஆண் : ஒரு நாள் பூக்களும்தான்…
தலுக்கென புன்னகைக்கும்…
சிரிக்கும் மனிதனுக்கே…
சிகரம் காத்திருக்கும்…

ஆண் : பூ முதல் புல் வரைக்கும்…
ஒவ்வொன்றும் ரசித்திடலாம்…
குயிலின் கூட்டுக்குள்ளே…
கொஞ்ச நாள் வசித்திடலாம்…

ஆண் : வானவில்லை கண்டால்…
நீ விழி இமைக்காதே…
அது மூணு நிமிஷம்தான்…
அதை இழந்துவிடாதே…

ஆண் : வானம் வரை எட்டும்…
எங்கள் வாழ்த்து சத்தம்தான்…
காலம் கை தட்டும்…
இனி காதல் நித்தம்தான்… ஹே…

ஆண் : வானம் வரை எட்டும்…
எங்கள் வாழ்த்து சத்தம்தான்…

பெண் : ஆசை வந்தாச்சே…
ஆசை வந்தாச்சே…
நெஞ்சுக்குள்ளேதான்…
புது புது ஆசை வந்தாச்சே…

பெண் : ஏதேதோ கனவுகள்தான்…
கண்ணில் வந்தாச்சே…
இது போல வாழ்ந்திடதான்…
ஆசை வந்தாச்சே…

BGM

ஆண் : வாழ்வில் ஒரு முறைதான்…
திருமண கோலம் வரும்…
அடடா அன்று முதல்…
ஆனந்த காலம் வரும்…

ஆண் : ஒவ்வொரு இதயத்திலும்…
திருமண ஞாபகங்கள்…
ஆயுள் காலம் வரை…
இருக்கும் ஆனந்தங்கள்…

ஆண் : உறவுகள்தான் என்றும்…
உங்கள் கூட வருமே…
அந்த உறவுகள்தான் வந்தால்…
அந்த வாழ்க்கை சுகமே…

ஆண் : உலகத்தின்…
உலகத்தின் செல்வந்தன் ஆன ஒருவன்…
ஒரு லட்சம் சொந்தங்கள் சேர்த்த மனிதன்…

பெண் : காதல் நெஞ்சமே…
காதல் நெஞ்சமே…
இன்று சேர்ந்திடும்…
அழகிய காதல் நெஞ்சமே…

பெண் : நூறாண்டு சேர்ந்திருக்க…
வாழ்த்தும் நெஞ்சமே…
வாழ்வெல்லாம் சந்தோஷம்…
வந்து கொஞ்சுமே…

பெண் : காதல் நெஞ்சமே…
காதல் நெஞ்சமே…
இன்று சேர்ந்திடும்…
அழகிய காதல் நெஞ்சமே…

பெண் : நூறாண்டு சேர்ந்திருக்க…
வாழ்த்தும் நெஞ்சமே…
வாழ்வெல்லாம் சந்தோஷம்…
வந்து கொஞ்சுமே…

BGM


Notes : Manase Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Pa. Vijay. மனசே இள மனசே பாடல் வரிகள்.