பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ & திப்பு | யுவன் ஷங்கர் ராஜா | புதிய கீதை |
Naan Odum Nadhi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…
ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…
ஆண் : எந்த வேலையும் செய்வேன்…
அதில் ஏற்றத்தாழ்வு ஏது…
அட உன்னை நம்பியே நின்றால்…
உனை ஊரும் பேசாதோ…
ஆண் : நெற்றி வேர்வையை சிந்த…
ஒரு நேரம் காலம் என்ன…
அட வெற்றி என்று தென்றல்…
நம் வாசல் வந்து வீசாதோ…
ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…
ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…
—BGM—
ஆண் : போகவில்லை நேரம்…
என பேசாதீர்கள் யாரும்…
அது போதவில்லை என்றே சொல்லி…
வேலை செய்யுங்கள்…
ஆண் : அட இமயம் என்ன இமயம்…
நீ இதயம் வைத்தால் அதையும்…
அள்ளி ஏந்தக்கூடும் உள்ளங்கையில்…
இன்று நீங்கள்…
ஆண் : மனிதன் என்னும் சொல் பெரியதடா…
கொடுத்திடு அதற்க்கொரு பெருமையடா…
குழு : பிறர் கண்ணிலே வரும் நீர்த்துளி…
இந்த கைகள் துடைக்கும்…
அந்த கைகள்தான் அன்பு காவியம்…
இந்த மண்ணில் படைக்கும்…
ஆண் : ஹோய்… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…
ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…
—BGM—
ஆண் : என்ன நேரும் நாளை…
என எடுத்துக்கூறும் மூளை…
அந்த தெய்வம் இங்கே…
யாருக்குமே தந்ததில்லையே…
ஆண் : அட இன்றே இப்போ இங்கு…
என எதையும் செய்தால் நன்று…
நான் சொல்லும் வார்த்தை நண்பா…
கொஞ்சம் சிந்திப்பாயே…
ஆண் : இருக்கின்ற பொழுதை பயன்படுத்து…
தடைகளை உடைத்து தலை நிமிர்த்து…
குழு : இந்த வேள்விதான்…
இந்த வேளைதான்…
இனி போனால் வருமா…
குழு : இது ஒன்று தான்…
நிஜம் என்றுதான்…
நாம் வாழ்வோம் நலமா…
ஆண் : ஹோய்… ஹோய்… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…
ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…
ஆண் : எந்த வேலையும் செய்வேன்…
அதில் ஏற்றத்தாழ்வு ஏது…
அட உன்னை நம்பியே நின்றால்…
உனை ஊரும் பேசாதோ…
ஆண் : நெற்றி வேர்வையை சிந்த…
ஒரு நேரம் காலம் என்ன…
அட வெற்றி என்று தென்றல்…
நம் வாசல் வந்து வீசாதோ…
ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…
ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…
—BGM—
Notes : Naan Odum Nadhi Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Vaali. நான் ஓடும் நதி பாடல் வரிகள்.