Category Archives: சொல்ல மறந்த கதை

சொல்ல மறந்த கதை – Solla Marandha Kadhai (2002)

குண்டுமல்லி குண்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஹரிஷ் ராகவேந்திர & ஸ்ரேயா ஹோசல்இளையராஜாசொல்ல மறந்த கதை

Gundu Malli Song Lyrics in Tamil


BGM

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
கையில் நீ எடுத்து தோளில் மாலை கட்டு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

ஆண் : அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்…
வீணை நரம்பினிலே… ஹோஹோஓ…
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்…
எந்தன் நரம்பினிலே… ஹோஹோஓ…

பெண் : காட்டுக் குழலின் ஓட்டையிலே…
கண்ட படி உன் கை படுதே…
மூடி திறக்கும் மாயையிலே…
மெல்ல என் மூச்சைதான் தொடுதே…

ஆண் : காமனும் இந்தக் காட்டினிலா…
வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா…
மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

பெண் : சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்…
இந்த வெட்கம் தெரிகிறதே… ஹோஹோஓ…
சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன்…
எண்ணம் புரிகிறதே… ஹோஹோஓ…

ஆண் : இன்பக் கலைகள் எத்தனையோ…
அது என்று தொடங்கியதார் அறிவார்…
சொல்லித் தரவும் மீதம் உண்டோ…
இந்த சொர்க சுகங்கள் தந்தது யார்…

பெண் : காலங்கள் எங்கே நின்றதுவோ…
கண் கொண்டு காதலர் கண்டதுவோ…
மின்மினியே நிறம் என்ன சொல்லு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் & பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…


Notes : Gundu Malli Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. குண்டுமல்லி குண்டுமல்லி பாடல் வரிகள்.


ஏதோ ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாபவதாரிணி & கார்த்திக்இளையராஜாசொல்ல மறந்த கதை

Yedho Onnu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…

பெண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…

ஆண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

BGM

ஆண் : என்ன சொல்லுது உந்தன்…
பெண்மை உள்ளத்தில் உள்ள…
சங்கதியா சங்கதியா…

BGM

ஆண் : உண்மை உன் கண்கள் சொல்ல…
கண்கள் என் உள்ளம் கொள்ள…
நிம்மதியா நிம்மதியா…

BGM

பெண் : நடப்பத சொல்ல நான் யாரு…
நடக்குது உள்ளத் தகராறு…
உள்ளமும் உண்மைய அறியாது…
ஒருவருக்கும் இது தெரியாது…

ஆண் : போயி வரும் வெண்ணிலவே…
நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன்…
போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

BGM

பெண் : பக்கம் நீ நின்றிருக்க…
தூரம் என் உள்ளம் செல்லும்…
என்னடியோ ஏனடியோ…

BGM

பெண் : எங்கோ நீ தூரம் நிற்க…
நெஞ்சில் நீ ஒட்டி நிற்க…
என்னடியோ ஏனடியோ…

ஆண் : தாளம் எங்கே தெரியாமல்…
அடிக்குது அடிக்குது இள மனசு…
ராகம் என்னும் கடலினிலே…
தவிக்குது தவிக்குது அலை அடிச்சு…

பெண் : புது வழியில் மனசு போகையிலே…
புது புதுசா எதையோ பாக்கையிலே…
பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே…

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

பெண் : வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
பூங்கிளியே மாங்குயிலே கூறு…
ஆண் : பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…

பெண் : உண்மைய நீ ரகசியமா பேசு…
ஆண் : உள்ள துணை உன்ன விட்டா வேறாரு…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…


Notes : Yedho Onnu Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. ஏதோ ஒன்னு பாடல் வரிகள்.