Category Archives: ரோஜா கூட்டம்

உயிர் கொண்ட ரோஜாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபரத்வாஜ்பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Uyir Konda Rojaave Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம்… உயிர் கொண்ட ரோஜாவே…
குழு : ரோஜாவே ரோஜாவே…
ஆண் : உயிர் வாங்கும் ரோஜாவே…
குழு : ரோஜாவே ரோஜாவே…

ஆண் : உயிர் கொண்ட ரோஜாவே…
உயிர் வாங்கும் ரோஜாவே…
கிள்ளி போகவே வந்தேன்…

ஆண் : பக்கம் வந்த ரோஜாபூ…
பக்தன் என்று சொல்லியதால்…
பூஜை அறையில் வைத்தேன்…

ஆண் : அன்று காதலனா இன்று காவலனா…
விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே…

குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம்…
அருகில் ரோஜா கூட்டம்…
நடுவில் முள்ளின் தோட்டம்…

BGM

ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…

ஆண் : தூரத்தில் இருக்கையில் அண்மையில் இருந்தாய்…
அடிவான் நிலவாக…
அண்மையில் வந்ததும் தூரத்தில் தொலைந்தாய்…
கரைமேல் அலையாக…

ஆண் : கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது…
உள்ளத்தில் நில நடுக்கம்…

ஆண் : ஒரு சொர்க்கத்துக்குள் சிறு நரகமடி…
என் முகமேதான் முகம் மூடி பாரடி…

குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம்…
அருகில் ரோஜா கூட்டம்…
நடுவில் முள்ளின் தோட்டம்…

BGM

ஆண் : கண்களில் இருந்து உறக்கத்தை முறித்து…
இரவில் எரித்துவிட்டேன்…
நெஞ்சத்தில் இருந்து காதலை உறித்து…
பாதியில் நிறுத்திவிட்டேன்…

ஆண் : ஒரு சில சமயம் உயிர் விட நினைத்தேன்…
உனக்கே உயிர் சுமந்தேன்…

ஆண் : அடி சினேகிதியே முன் காதலியே…
என் நெஞ்சோடு என் காதல் வேகட்டும்…

{ குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம்…
அருகில் ரோஜா கூட்டம்…
நடுவில் முள்ளின் தோட்டம்… } * (2)

ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…

BGM


Notes : Uyir Konda Rojaave Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. உயிர் கொண்ட ரோஜாவே பாடல் வரிகள்.


ஆப்பிள் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Apple Penne Neeyaaro Song Lyrics in Tamil


ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
நீ யாரோ நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
நீ யாரோ நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

BGM

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

ஆண் : பூவின் மகளே நீ யாரோ…
புன்னகை நிலவே நீ யாரோ…
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ…

ஆண் : என்னை நீ பார்க்கவில்லை…
என் உயிர் நொந்ததடி…
பெண்ணே நீ போன வழியில்…
என் உயிர் போனதடி…

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

BGM

ஆண் : மின்னலை கண்டு கண்கள் மூடி…
கண்களை திறந்தேன் காணவில்லை…
மின்னல் ஒளியை கையில் கொள்ள…
ஐயோ ஐயோ வசதியில்லை…

BGM

ஆண் : என்னை நோக்கி சிந்திய மழைத்துளி…
எங்கே விழுந்தது தெரியவில்லை…
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ…
இதுவரை ஏதும் தகவலில்லை…

ஆண் : அழகே உன்னை காணாமல்…
அன்னம் தண்ணீர் தொட மாட்டேன்…
ஆகாயத்தின் மறு பக்கம்…
சென்றால் கூட விடமாட்டேன்…
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்…
கடவுளை தொழ மாட்டேன்…

BGM

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

BGM

ஆண் : பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்…
லவ் யூ லவ் யூ சொல்வாயா…
பாவம் ஐயோ பைத்தியம் என்று…
பார்வையினாலே கொல்வாயா…

BGM

ஆண் : உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்…
அங்கும் வருவேன் அறிவாயா…
உயிரை திருகி கையில் தந்தால்…
ஓகே என்று சொல்வாயா…

ஆண் : ஆமாம் என்று சொல்லிவிட்டால்…
ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்…
இல்லை என்று சொல்லிவிட்டால்…
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்…
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்…
மீண்டும் காதலிப்பேன்…

BGM

ஆண் : எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…

ஆண் : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…

ஆண் : பூவின் மகளே நீ யாரோ…
புன்னகை நிலவே நீ யாரோ…
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ…

BGM


Notes : Apple Penne Neeyaaro Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆப்பிள் பெண்ணே பாடல் வரிகள்.


சுப்பம்மா சுப்பம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமாணிக்க விநாயகம் & மால்குடி சுபாபரத்வாஜ்ரோஜா கூட்டம்

Subbamma Subbamma Song Lyrics in Tamil


ஆண் : சுப்பம்மா ஏய் சுப்பம்மா… ஆஆ…
சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…

குழு : சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…
சுப் சுப் சுப் சுப் சுப்பம்மா…

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
யே சூலூரு சுப்பம்மா…
நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

ஆண் : ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்…
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா…

பெண் : பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா…
இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா…
காதல் பண்ண புடிக்குமா…
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா…

BGM

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
குழு : சுப்பம்மா…
ஆண் : யே சூலூரு சுப்பம்மா…
குழு : சுப்பம்மா…

ஆண் : நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

BGM

ஆண் : மதுரை மல்லிகையும் நெல்லை அல்வாவும்…
வாங்கி தந்தால்தான் ஆள புடிக்குமா…

BGM

பெண் : லஞ்சம் நீ தந்து மஞ்சம் குடி வந்தா…
பஞ்சம் என் பஞ்சம் உன்னால் தீருமா…

ஆண் : யே புல்லாங்குழல் வாசிக்கிற மென்மை புடிக்குமா…
இல்ல சங்கெடுத்து ஊதுகின்ற வன்மை புடிக்குமா…

பெண் : நீ எப்போதுமே முப்போகமா…
கட்டில்தான் பெண்ணுக்கு உத்யோகமா…
ஊர் தாங்குமா…

BGM

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
யே சூலூரு சுப்பம்மா…
நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

BGM

குழு : பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே…
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்கவிட்டாலே…
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்கவிட்டாலே…

குழு : னா னா னா னா னா னா னா னா…
சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு…
சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு…

BGM

பெண் : கட்டில் சேவைகளும் காதல் தேவைகளும்…
என்றும் பெண்ணுக்கு இன்பம் தராது…

BGM

பெண் : சேவை முடிந்த பின்னும் சேர்த்தே அணைத்த படி…
செவிகள் வருடி கொண்டு தூங்கவிடாதே…

ஆண் : ஆ மடிய மட்டும் நெறைய வைக்க இரவு போதுமடி…
உன் மனசு எல்லாம் கரைய வெய்க்க ஆயுள் வேணுமடி…

பெண் : நாணம் தாக்கும் பேதை பெண்ணின்…
மானம் காக்கும் மனிதன் தலைவன்தான்டா…
கடவுள்தான்டா…

BGM

பெண் : சுப்பம்மா சுப்பம்மா…
நான் சூலூரு சுப்பம்மா…

ஆண் : நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

ஆண் : ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்…
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா…

பெண் : பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா…
இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா…
காதல் பண்ண புடிக்குமா…
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா…

BGM

குழு : சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…
சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…


Notes : Subbamma Subbamma Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. சுப்பம்மா சுப்பம்மா பாடல் வரிகள்.


mottugale-mottugale-song-lyrics-in-tamil

மொட்டுகளே மொட்டுகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & ஹரிஹரன் பரத்வாஜ்ரோஜா கூட்டம்

Mottugale Mottugale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
கண்மணியாய் தூங்குகிறாள்…
காலையில் மலருங்கள்…

ஆண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலி துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

பெண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
காதலன்தான் தூங்குகிறான்…
காலையில் மலருங்கள்…

பெண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலன் துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

BGM

பெண் : நீ ஒரு பூ கொடுத்தால்…
அதை மார்புக்குள் சூடுகிறேன்…
வாடிய பூக்களையும்…
பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்…

ஆண் : உன்வீட்டுத் தோட்டம் கண்டு…
இரவில் வந்து சேர்வேன்…
ரோஜாக்களை விட்டு விட்டு…
முட்கள் திருடிப்போவேன்…

பெண் : நீ ஆகட்டும் என்று சொல்லி விடு…
உன் சட்டையில் பூவாய் பூப்பேன்…

ஆண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
கண்மணியாய் தூங்குகிறாள்…
காலையில் மலருங்கள்…

ஆண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலி துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

BGM

ஆண் : காதலி மூச்சுவிடும்…
காற்றையும் சேகரிப்பேன்…
காதலி மிச்சம் வைக்கும்…
தேனீர் தீர்த்தம் என்பேன்…

பெண் : கடற் கரை மணலில் நமது…
பேர்கள் எழுதி பார்ப்பேன்…
அலை வந்து அள்ளிச் செல்ல…
கடலை கொல்ல பார்ப்பேன்…

ஆண் : உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்…
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்… பார்ப்பேன்…

பெண் : மொட்டுகளே மொட்டுகளே…
மூச்சுவிடா மொட்டுகளே…
காதலன்தான் தூங்குகிறான்…
காலையில் மலருங்கள்…

பெண் : பொன்னரும்புகள் மலர்கையிலே…
மென் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலன் துயில் கலைந்தால்…
என் இதயம் தாங்காது…

BGM


Notes : Mottugale Mottugale Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. மொட்டுகளே மொட்டுகளே பாடல் வரிகள்.