Category Archives: பார்த்தேன் ரசித்தேன்

எனக்கென ஏற்கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Enakena Yerkanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…

BGM

ஆண் : உயிரே உயிரே உடம்பில் சிறந்தது…
எதுவென்று தவித்திருந்தேன்…
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்…

ஆண் : கண்ணே உன்னை காட்டியதால்…
என் கண்ணே சிறந்ததடி…
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்…
கண்முன் பிறந்ததடி…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…
அது காலத்தை தட்டுகின்றது…

பெண் : என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…
என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

BGM

ஆண் : மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே…
மனசையும் மறைக்காதே…
என் வயதையும் வதைக்காதே…

BGM

ஆண் : புல்வெளி கூட பனித்துளி என்னும்…
வாா்த்தை பேசுமடி…
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால்…
காதழும் வாழுமடி…

பெண் : வாா்த்தை என்னை கைவிடும் போது…
மௌனம் பேசுகிறேன்…
என் கண்ணீா் பேசுகிறேன்…

பெண் : எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…
எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…


Notes : Enakena Yerkanave Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. எனக்கென ஏற்கனவே பாடல் வரிகள்.


கெடைக்கல கெடைக்கல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Kedaikala Kedaikala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

ஆண் : பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி பேகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

BGM

ஆண் : ஓ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…

BGM

ஆண் : ஹோ… பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு…
வாழ்க்கையில பாக்கலாம்…
டெர்மினசு சேரும் முன்னே…
ப்ரேக்கு டௌனு ஆகலாம்…

ஆண் : பஸ்சு மிசுனு சொல்ல முடியாது…
ரூட்டு எப்பொவும் மாறலாம்…
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது…
போர்டு மாத்தி ஓட்டலாம்…

ஆண் : ஒண்ணு போன ஒண்ணு வருவது…
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்…
பொண்ணு போனா என்ன வரும்…
என் பூனைகுட்டிக்கும் தாடி வரும்…
என் தலை எழுத்த பிரம்மனவன்…
எடது கையால் கிருக்கிட்டான்…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

BGM

ஆண் : என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…

BGM

ஆண் : ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லையே…
எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே…

ஆண் : ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்…
ஷவரில் குளிக்கும் பெண்களே…
செம்பரம்பக்கம் ஏரிய போல…
வரண்டு போச்சு கண்களே…

ஆண் : சவுரி முடி எதுக்கடி…
அது ஆண்களுக்கு சவுக்கடி…
இதயமெல்லாம் காயபட்டும்…
இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி…
அஹிம்சையான இம்சையடி…
காதல் என்னும் நெருக்கடி…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…

ஆண் : ஏ… பஸ்சுல பாத்த மைனாவே…
விட்டு பாதியில் இரங்கி போகாதே…
போகாதே போகாதே போகாதே…
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல…
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல…
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல…
புடிக்கல புடிக்கல…
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல…


Notes : Kedaikala Kedaikala Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. கெடைக்கல கெடைக்கல பாடல் வரிகள்.


தின்னாதே என்னை தின்னாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Thinnathe Thinnathe Song Lyrics in Tamil


ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

BGM

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே…
நீ சைவம்தானே பெண்ணே என்னை தின்னாதே…
ஜோடி கண்ணில் என்னை கொத்தி…
ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

பெண் : சீ சீ சீ சீ சீ சீ…
சீண்டாதே என்னை சீண்டாதே…
தின்னுவதை விடவும் இங்கு…
தின்னபடுதல் இன்னும் இன்பம் அல்லவா அல்லவா…
சீண்டாதே என்னை சீண்டாதே…

BGM

ஆண் : பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்…
முந்தானை பூவாசம் காட்டிவிட்டாயே…

BGM

பெண் : ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்…
பூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே…

ஆண் : பூவுக்குள்ளே தீ பிடித்தால்…
கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்…

பெண் : சுட சுட குடித்து விடு…
தீா்ந்த பிறகும் தேன் சுரக்கும்…

ஆண் : பாா்வை என்னும் ஈட்டி போட்டு…
கொன்று என்னை கூறு போட்டு…
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

பெண் : சீண்டாதே என்னை சீண்டாதே…

BGM

ஆண் : ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்…
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே…

BGM

பெண் : சுவையாறு என்பாா்கள்…
சுவை ஏழு என்பேன் நான்…
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்துவிட்டாரே…

ஆண் : ஆ… குடலுக்கு பசி எடுத்தால்…
உணவு கொடுக்க அடங்கிவிடும்…

பெண் : உடலுக்கு பசி எடுத்தால்…
கொடுக்க கொடுக்க வளா்ந்துவிடும்…

ஆண் : வண்டு விழியில் என்னை கொன்று…
சுண்டு விரலில் துண்டு செய்து…
மாா்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

ஆண் : தின்னாதே ஓ தின்னாதே…
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே…
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே…
ஜோடி கண்ணில் என்னை கொத்தி…
ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே… தின்னாதே…


Notes : Thinnathe Thinnathe Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. தின்னாதே என்னை தின்னாதே பாடல் வரிகள்.


Parthen Rasithen Song Lyrics in Tamil

பார்த்தேன் ரசித்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயுகேந்திரன் & ரேஷ்மிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Parthen Rasithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க…
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க…
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே… ஹே… ஹே… ஹே…

BGM

ஆண் : கண்ணும் கண்ணும் மோதிய வேளை…
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை…
கடவுள் பார்த்த பக்தன் போலே…
கையும் காலும் ஓட வில்லை…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…
உன்னை பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : தேவதையும் பேருந்தில் வருமா…
கனவா நனவா தோன்றவும் இல்லை…
நல்ல வேளை சிறகுகள் இல்லை…
நானும் அதனால் நம்பவில்லை…

பெண் : ஆஆ… ஹா…
ஆண் : நெற்றி என்ற மேடையிலே…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : ஒற்றை முடியை ஆடவிட்டாள்…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : ஒற்றை முடியில் என்னை கட்டி…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்…

ஆண் : மனதில் இத்தனை ரணமா…
அட வலியில் இத்தனை சுகமா…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

BGM

ஆண் : வேலை தேடும் இளைஞன் கேட்டேன்…
காதல் செய்யும் வேலை போடு…
வந்த என்னை வேண்டாம் என்றால்…
அணைத்து அணைத்தே கொன்று விடு…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…
உன்னை பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : உலர்ந்து போன எந்தன் வாழ்வை…
நாக்கின் நுனியால் ஈரமாக்கு…
உறைந்து போன எந்தன் இரவை…
ஓர பார்வையில் உருக விடு…

பெண் : ஆஆ… ஹா…
ஆண் : என்னை தவிர ஆண்கள் எல்லாம்…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : பெண்களாகி போனால் கூட…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உன்னை தவிர இன்னொரு பெண்ணை…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை…

ஆண் : மனதில் இத்தனை ரணமா…
அட வலியில் இத்தனை சுகமா…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க…
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க…
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

BGM


Notes : Parthen Rasithen Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. பார்த்தேன் ரசித்தேன் பாடல் வரிகள்.