Category Archives: ஜோடி

kai-thatti-thatti-song-lyrics

கை தட்டி தட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & டிம்மி ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Kai Thatti Thatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : கை தட்டி தட்டி அழைத்தாளே…
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே…
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே…
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

BGM

ஆண் : ரத்தினத்து தேர் ஆனாள்…
என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானாள்…
என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனாள்…

ஆண் : என் நெஞ்ச குளத்தில்…
பொன் கல்லை எறிந்தாள்…
அலை அடங்கும் முன்…
நெஞ்சத்தில் குதித்தாள்…

ஆண் : விழியால் நெஞ்சுடைத்து விட்டாள்…
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

BGM

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம்…
பம்பம்பம் தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம்…

BGM

ஆண் : பால்வண்ண நிலவெடுத்து…
பாற்கடலில் பலமுறை சலவை செய்து…
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ…

ஆண் : என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ…
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ…
அழகை தத்தெடுத்தவளோ…
என் உயிர் மலரை தத்தரித்தவளோ…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்….


Notes : Kai Thatti Thatti Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. கை தட்டி தட்டி பாடல் வரிகள்.


வெள்ளி மலரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மஹாலக்ஷ்மி ஐயர்ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Velli Malare Song Lyrics in Tamil


BGM

பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்…
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ…
தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே…
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே…
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…

பெண் : ஓ…ஓ…ஓ…

ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

BGM

பெண் : ஏ ஏ ஏ ஏ…..

ஆண் : மின்னொளியில் மலா்வன தாழம்பூக்கள்…
கண்ணொளியில் மலா்வன காதல் பூக்கள்…
நெஞ்சுடைந்த பூவே நில்…

பெண் : ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை…
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை…
ஆடைகொள்ளப் பாா்ப்பீா்…
ஐயோ தள்ளி நில் நில்…

ஆண் : வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே…
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே…
உன்னைக்கண்டு உயிா்த்தேன்…
சொட்டுதே சொட்டுதே…

பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

BGM

பெண் : வனங்களில் பூந்தளிா் தேடும் போதும்…
நதிகளில் நீா்க்குடைந்தாடும்போதும்…
உந்தன் திசை தேடும் விழிகள்…

ஆண் : தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்…
அருகினில் செல்லச் செல்ல ஓடிப்போகும்…
நீயும் மேகம்தானா… நெஞ்சைத் தொட்டுச் சொல் சொல்…

பெண் : மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்…
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்…
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான்…

ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்…
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ…
தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி…
மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…


Notes : Velli Malare Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளி மலரே பாடல் வரிகள்.


காதல் கடிதம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Kadhal Kaditham Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா …
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

BGM

பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்…
கண்ணா நான் வாழுகிறேன்…
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ…

ஆண் : பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்…
விரல் பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ…

பெண் : அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்….
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்….

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ஹோ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

BGM

ஆண் : ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில்…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…

பெண் : ஆ… காலோடு கொலுசல்ல…
கண்ணோடு உயிரானாய்…
உயிரே நான் உறங்கும்…
போதும் உறங்கமாட்டாயா…

ஆண் : தப்பு செய்யப் பாா்த்தால்…
ஒப்புக் கொள்வாயா…
மேலாடை நீங்கும் போது…
வெட்கம் என்ன முந்தானையா…

பெண் : ல லா ல லா ல லா ….

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ல லா ல லா ல லா ….

ஆண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…

ஆண் & பெண் : இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

ஆண் : ஹோ…..


Notes : Kadhal Kaditham Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. காதல் கடிதம் பாடல் வரிகள்.


அஞ்சாதே ஜீவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசீர்காழி கோ. சிவசிதம்பரம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Anjathe Jeeva Song Lyrics in Tamil


பெண் : ஜீவா…
ஆண் : ஓஓஓ……
பெண் : ஜீவா ….

BGM

பெண் : அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா …
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா ஜீவா ஜீவா…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா ஜீவா ஜீவா…

பெண் : பூக்களையே ஆயுத்தமாய் கொண்டவன் நீ தானே…
பூவிாிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே…
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா…
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா…
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா…

ஆண் : ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா…
என் போா்வைக்குள் அடிக்கிற வெயிலே வா…
ஒரு புன்னகை பூக்கும் பூவே வா…
ஜீவா… ஜீவா…

BGM

ஆண் : ஓஓஓஓஓ…….

ஆண் : காதல் இல்லாத நகரம்…
அது காற்று இல்லாத நரகம்…
காதல் இல்லாத நகரம்…
அது காற்று இல்லாத நரகம்…

பெண் : காற்று இல்லாத இடமும்…
அட காதல் தொியாமல் நுழையும்…

ஆண் : கண்ணில் மணியாகி…
உன்னில் உயிராகி…
காதல் யோகம் கொண்டாட வேண்டும்…

பெண் : சந்திர மண்டலம் எல்லாம்…
நாம் தாவி விளையாடவேண்டும்…

ஆண் : ஒன்பது கிரகம் தாண்டி…
நாம் ஓடி விளையாட வேண்டும்…

பெண் : வானம் முடியும்…
முடியாது காதல் பயணம்…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா… ஜீவா ஜீவா…

பெண் : என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா…
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா…
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா…

BGM

பெண்கள்(குழு): அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு…
வா வா ஆனந்த பூவே அன்பே வா…

ஆண் : ஓஓஓஓஓ….

ஆண் : காதல் தப்பென்று சொல்ல…
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல…
காதல் தப்பென்று சொல்ல…
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல…

பெண் : இரவு நேரத்து போாில்…
நீ என்னை எப்போது வெல்ல…

ஆண் : பெண்மை தோற்றாலும்…
ஆண்மை தோற்றாலும் முடிவில்…
இருவரும் வென்றாக வேண்டும்…

பெண் : ஒவ்வொரு காலையின் போதும்…
உன் மாா்பில் நான் தூங்க வேண்டும்…

ஆண் : காலங்கள் முடிகின்ற போதும்…
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்…

பெண் : மீண்டும் மீண்டும்…
நாம் காதல் ஜென்மம் காணலாம்…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
பெண்கள்(குழு): ஜீவா ஜீவா…
ஆண் : வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா…


Notes : Anjathe Jeeva Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சாதே ஜீவா பாடல் வரிகள்.


ஒரு பொய்யாவது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil


ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : பூக்களில் உன்னால் சத்தம்…
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…

ஆண் : பெண்மையும் மென்மையும்…
பக்கம் பக்கம்தான்…
ரொம்பப் பக்கம் பக்கம்தான்…
பாா்த்தால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்…
வண்ணம் ஒன்றுதான்…
பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்…
உண்டால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

BGM

ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ…
இரவினைத் திரட்டி…
கண்மணியின் குழல் செய்தாரோ…
கண்மணியின் குழல் செய்தாரோ…
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ…

ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு…
விரலில் நகம் சமைத்து…
மின்னலின் கீற்றுகள் கொண்டு…
கைரேகை செய்தானோ…

ஆண் : வாடைக் காற்று பட்டு…
வயதுக்கு வந்த பூக்கள்…
கொண்டுத் தங்கம் தங்கம்…
பூசித் தோள் செய்தானோ…
ஆனால் பெண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…
காதல் கண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…

BGM

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…

ஆண் : நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
சொல்லில் அந்த சொல்லில்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…

BGM


Notes : Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பொய்யாவது பாடல் வரிகள்.