Category Archives: ஜல்லிக்கட்டுக் காளை

ஜல்லிக்கட்டுக் காளை – Jallikattu Kaalai (1994)

தூக்கணாங்குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஜல்லிக்கட்டுக் காளை

Thookanakuruvi Song Lyrics in Tamil


பெண் : சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள…
சிரிச்சு கட்டின வீடு…
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா…
சென்ன பட்டணம் பாதி…

BGM

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

ஆண் : பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

பெண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

ஆண் : பூத்த மல்லிகை வேர்த்திருந்தது…
நான் தொடும் போது…

பெண் : அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது…
தேன் தரும் போது…

ஆண் : ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது…
உன் மனம்தானே…

பெண் : மனம் சாந்தம் கொண்டதும்…
சரசம் செய்வதும் உன் விரல்தானே…

ஆண் : கோடியிலே நீ ஒருத்தி…
கொத்து விட்ட செம்பருத்தி…

பெண் : காளை ஒன்னு சாஞ்சதைய்யா…
கன்னிப் பொண்ணு சேலை முட்டி…

ஆண் : மனம் பாடிப் பாடி…
தினம் தேடித் தேடி…
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே…

குழு : பொன்னம்மா கண்ணம்மா…
பூவெடுத்து போடம்மா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

பெண் : ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்…
ஆண் : அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்…

பெண் : கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே…
ஆண் : உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே…

பெண் : பால் எடுத்து நான் கொடுத்து…
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்…

ஆண் : தேவியிடம் மண்டியிட்டு…
தேவைகளை கெஞ்சிடுவேன்…

பெண் : அட போதும் போதும் இன்று…
நாளை பார்ப்போம் என்று…
நானும் தள்ளிப் படுத்தேனே…

குழு : அம்மம்மா மாப்பிள்ளை…
ஏங்குவது நியாயமா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

பெண் : பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…


Notes : Thookanakuruvi Song Lyrics in Tamil. This Song from Jallikattu Kaalai (1994). Song Lyrics penned by Kalidasan. தூக்கணாங்குருவி பாடல் வரிகள்.