Category Archives: மகாநதி

மகாநதி

ஸ்ரீரங்க ரங்க நாதனின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன் & மகாநதி ஷோபனாஇளையராஜாமகாநதி

Sri Ranga Ranganathanin Song Lyrics in Tamil


பெண் : கங்கா சங்காச காவேரி…
ஸ்ரீரங்கேச மனோஹரி…
கல்யாணகாரி கலுசாரி…
நமஸ்தேஸ்து சுகாசரி…

BGM

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…

பெண் : இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…

BGM

பெண் : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்…
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்…
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்…
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்…

பெண் : அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்…
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்…
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்… ம்ம்…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…

BGM

ஆண் : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்…
கன்னி உன் மறு வீடு தென்னகம் ஆகும்…
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்…
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்…

ஆண் : நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி…
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி…
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி…

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…

ஆண் & பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…


Notes : Sri Ranga Ranganathanin Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடல் வரிகள்.


pongalo-pongal-song-lyrics

பொங்கலோ பொங்கல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஇளையராஜாமகாநதி

Pongalo Pongal Song Lyrics in Tamil


—BGM—

குழு : பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…

—BGM—

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடைக் கட்டிடும்…
தெய்வ மங்கையடி…

குழு : ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…

குழு : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…

—BGM—

பெண் : முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால…
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால…
சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா…
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா…

பெண் : செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்…
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்…

குழு : நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது…
வானில் இல்லையடி…
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது…
கனவில் இல்லையடி…

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்…
தெய்வ மங்கையடி…


Notes : Pongalo Pongal Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள்.